25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக நாட்டு மக்களை தெளிவுடுத்தும் துண்டுப்பிரசுர விநியோகம் இன்று(09) காலை 07.00 மணி முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டு நாடு பூராகவும் முன்னிலை சோசலிச கட்சியினால் விநியோகிக்கப்படுகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதில் முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் சேனாதீர குணதிலக்க மற்றும் அரசியல் குழு உறுப்பினர் ரவீந்திர முதலிகே மற்றும் கட்சி ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.