தோழர் மணியம் அவர்களின் நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கட்சி பணிமனையில் வடபிராந்தியச் செயலாளர் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சமகாலச் சூழலில் பொதுவுடமை இயக்கத்தின் தேவையும் அவசியமும் என்ற தலைப்பில் தோழர் அ.சீவரத்தினமும் வெகுஜன இயங்கு தளங்களில் வேலைகளை முன்னெடுத்தல் என்ற தலைப்பில் தோழர் த. பிரகாஸ் அவர்களும் உரையாற்றினர்.