யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந் அவர்களின் வீடு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது.
யாழ்ப்பாணம் பிறவுண்வீதியில் உள்ள தனது வீடு இன்று (31) இரவு 7.20மணியளவில் தாக்குதலுக்கு இலக்கானதாக தர்ஷானந் தெரிவித்தார்.
அவரது வீட்டின் முன் பக்க ஜன்னல் கண்ணாடிகள் இத் தாக்குதலின் போது சேதமடைந்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அவர் குறிப்பிட்டார்.என்பது குறிப்பிடத்தக்கது.
{jcomments on}