இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அளிக்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
கல்வி நிலையங்களை இராணுவமயமாக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமே இந்தப் பயிற்சி என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டுகிறது.
பல்கலைக்கழக மாணவர்களை அரசியலில் ஈடுபடவிடாமல் தடுக்கும் செயலில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதி பி. ரிச்சர்ட் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.
http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130105_studentstraining.shtml