அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னால் தலைவர் சுரஞ்ஜித் பண்டார இன்று காலை தாக்குதலுக்குல்லாகியுள்ளார்.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களான ஜானக்க பண்டார ,மற்றும் சிசித்த பிரியங்கர ஆகியோரின் ஞாபகார்த்த தினம் வரும் ஜனவரி 02 ம் திகதி இடம்பெற இருப்பதால் இதற்கான வேலைகளில் ஈடுபட்டு விட்டு களனி பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பும் போதே இன்று அதிகாலை 02 மணியளவில் பல்கலைக்கழகத்திலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளதுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் என சந்தேகிப்பதாக சஞ்ஜீவ பண்டார கூறினார்.