"மிகவும் சுதந்திரமானதும், ஜனநாயகமானதுமான முறையில் மே தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கக் கிட்டியமை தனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாகத் நம்ம ஜனாதிhதி மேதினச் செய்தியாக தெரிவித்துள்ளார்.
"தம்மைக் கொலை செய்ய வெள்ளை வான் ஒன்றில் சிலர் துரத்தி வருவதாக ஜாதிக பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார். நான் செல்லும் இடங்களை வெள்ளை வான் ஒன்று பின் தொடர்கின்றது. இது தொடர்பில் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தம்மை பின்தொடர்ந்த வாகனத்தின் இலக்கம் போலியானது என்பதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டு பிடித்துள்ளனர்" என விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
மெய் சிலிர்க்க வைக்கும் சுதந்திரமானதும், ஜனநாயகமானதுமான சமதர்மப் பூங்காவாக எம்நாடு மிளிர்கின்றது. இதை மகிந்த மகாவம்சம் பதிவு செய்யவுள்ளது. ஆனால் பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை எனும் நிலகொண்டுதான் நாட்டு நிலவரங்கள் உள்ளன.