தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பாற்பட்டவர்கள் தங்கள் பக்க நியாயங்களை நீதிமன்றில் வெளிப்படுத்தி. குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியுமென பாதுகாப்பு அமைச்சு ஆலோசனையும் சொல்கின்றது. இது மட்டி-மடையன் கதைபோலதான் உள்ளது.
மட்டி எனும் வைத்தியரிடம் மடையன் எனும் நோயாளி மருந்துக்கு போனானாம். போனவுடன் வருத்தத்தைக் கேட்டு, ஆல், அரசு, புளி, புங்கு, பூவரசின் வேர்களை எல்லாம் கைபடாமல் பிடுங்கி, உரலில் உலக்கை படாமல் இடித்து, தேனில் விரல் படாமல் குழைத்து, நாக்குப் படமால் அதை நக்கி விழுங்கு உடன் சுகம் வரும் என்றாராம். இந்தக் கணக்கில்தான் மட்டியான மகிந்தரின் பாதுகாப்புத் தரப்பும், மடையர்களான சட்ட வல்லுனர்களும் நீதிமன்ற வைத்தியம் சொல்கின்றார்கள்.