"இலங்கையின் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் 1990-ம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை இனச்சுத்திகரிப்பு என்று தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளும் வரை, தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கிறது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மட்டக்களப்பில் தந்தை செல்வா நினைவுதின நிகழ்வில் தெரிவித்துள்ளார்.!
இது என்ன மதுரைக்கு வந்த சோதனை… தமிழர் தரப்பிற்கு வந்த விண்ணாணம்தான் என்ன?
சரி காலம் கடந்தாவது இந்த கறைபடிந்த சம்பவத்தையிட்டு இப்படியொரு "ஞானோதயம்" வந்ததையிட்டு புளகாங்கிதம் அடையலாம்!
ஆனால் சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்றும் கொள்ளலாம் தானே?
எம்நாட்டில் இந்த இனப்படுகொலைகள் எனும் "வரலாற்று வடுவிலிருந்து யாரும் தப்ப முடியாது"…. இது சிங்களப் பேரினவாதிகளுக்கும்தான்……
-அகிலன்
7/5/13