யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டைப் பகுதியில் ஐந்து குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கப்படுவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அதிகாரி ஏ.சிவசுவாமியினால் கையொப்பமிடப்பட்ட அறிவித்தல் யாழ். ஆனைக்கோட்டை கூழாவடிப் பகுதியிலுள்ள உப தபாலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியிலுள்ள 1ஏக்கர் 31பேர்ச் காணியே இவ்வாறு சுவீகரிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காணி ஸ்ரீலங்கா இராணவத்தின் 11 ஆவது சிங்க ரெஜிமன் B அணிக்கான நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு தேவைப்படுவதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
_