"தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழம் தான் வேண்டும் என்று கேட்கவில்லை".
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது என்கின்றார் கூட்டமைப்பின் சுமந்திரன்!
பாராளுமன்ற அரசியல் பிழைப்பிற்கு வங்குறோத்து வர,அதை வட்டுக்கோட்டையில் தமிழ் ஈழமாக்கியவர்களும் நீங்கள் தான்!
தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வதுதான் என சொன்னவர்களும், தீர்வாகாது என சொன்னவர்களை, துரோகிகளாக்கி இல்லாதாக்க ஏவியவர்களும் நீங்கள் தான்!
தமிழ் ஈழம் கொண்டு மாபெரும் "மனித வேள்வியையே" நடாத்தி முடித்து விட்டு, தமிழ் ஈழம் வேண்டாமெனும் சுடலை ஞானிகளும் நீங்கள் தான்!
மாற்றொன்று இல்லா நிலையில், சொல்லும் பிழைப்பு அரசியலுக்கு, மாற்றொன்று வரும்!
அக்காலை மக்கள் உங்கள் பிரச்சினைக்கும் தீர்வொன்று சொல்வர்! தீர்க்க முடிவொன்று செய்வர்!
--அகிலன் 14/05/2012