சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு" இன்று காலி நகரத்தில் பெண்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டது. சர்வதேச மகளிர் தினத்தை ஒரு நினைவு நாளாக அல்லாது புதிய தொடக்கமாக "எதிர்காலத்திற்காக போராடுவோம்" என்னும் கருப்பொருளில் பாடல்கள், தெருமுனை கூட்டங்கள், துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.