28
Fri, Jun

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று 04 புதன், கொழும்பு கோட்டை, அரசமரத்தின் அருகே நல்லாட்சி அரசால் பொது மக்கள் மீது புதிதாக சுமத்தப்பட்டுள்ள வற் வரியை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. "பொது மக்கள் மீதான வற் வரி விதிப்பதை வாயஸ் பெறு!", "செல்வந்தர்கள் மீது வரியை அறவிடு!" ஆகிய கோசங்களை முன்வைத்து சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டன.

பின்வரும் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்குபற்றினர்.

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், சுதந்திர ஆசிரியர்கள் சங்கம், குடியரசுக் பொது சுகாதார சங்கம், அகில இலங்கை சுகாதார தொழிலாளர் சங்கம், நீர்ப்பாசன தொழிலாளர்கள் சங்கம், ஒருங்கிணைந்த ஆசிரியர் சங்கம், அரசு மேலாண்மை கழகம் வர்த்தக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம், ஒருங்கிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்.