இன்று கேகாலை, இரத்தினபுர மற்றும் ஊவா மாகாண நகரங்களை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் மாநாடு இடம்பெற்றது. தமிக்க முனசிங்க அவர்கள் தலைமையில் இடம் பெற்ற இம் மாநாட்டில் தொழிலாளர் போராட்ட மையத்திய நிலையத்தின் சார்பாக துமிந்த நாகமுவ மற்றும் ஒருங்கிணைந்த ஆசிரியர்கள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஊவா மாகாண புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.
ஆட்சியாளர்களின் சரியான திட்டமிடல் இன்மை காரணமாக நாட்டில் வேலையற்ற பட்டதாரிகளின் தொகை வருடா வருடம் அதிகரித்து செல்லும் அபாயம் குறித்தும் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.