நேற்றைய தினம் கொழும்பு கரையோரம் உருவாக்கப்பட்டு வரும் போர்ட் சிற்றிக்கு எதிராக பல அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்ட போராட்டம் இடம்பெற்றது. இந்த போராட்டத்தினை கடற்தொழில் சங்கங்களின் ஒத்துழைப்பு இயக்கம், மாணவர் அமைப்புக்கள், பல தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்திருந்தன. சீன அரசின் மூலதனத்தில் அமைக்கப்படும் இப் போர்ட் சிட்டியால் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.