30
Sun, Jun

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று கோகாலை நீதிமன்றில்; குடியியல் சட்டத்தினை மீறியதான, குமாரின் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரச தரப்பு சட்டத்தரணி சமூகமளித்திருக்காததன் காரணத்தால் வழக்கினை விசாரணைக்கு உட்படுத்த முடியாததன் காரணமாக வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார். குமாரை தொடர்ந்தும் எதிர்வரும் ஜனவரி 21ம் திகதி வரை விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறும் உத்தரவிடப்படுள்ளது.

குமார் தனது இலங்கை குடியுரிமையினை மீள பெற பல விண்ணப்பங்களை குடிவரவு அமைச்சிற்கு விண்ணப்பித்தும் பதில்கள் ஏதும் கிடையாத நிலையே தொடர்ந்தும் நீடிக்கின்றது. ஜனாதிபதி, பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை குமாருக்கு குடியுரிமை வழங்கத்தான் வேண்டும், அதில் தமக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது ஆனால் இது சட்டப்பிரச்சனை என சட்டத்தை நோக்கி கையை நீட்டுகின்றனர். ஆனால் நீதிமன்றமோ இது சட்டப்பிரச்சினை அல்ல, அரசியல் பிரச்சனை என அரசாங்கத்தை நோக்கி கையை நீட்டுகின்றது.

சிங்கப்பூர் மகேந்திரனுக்கு 24 மணி நேரத்தில் குடியுரிமை வழங்கி மத்திய வங்கி ஆளுநராக்கவும்; கடவுச்சீட்டு மோசடி செய்த விமல் வீரவன்சாவை, பிரதமர் தலையிட்டு கைது செய்யப்படுவதில் இருந்து காப்பாற்றவும் அரசாங்கத்தால் முடியும். ஆனால் இலங்கையில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, அரசியல் கட்சி ஒன்றின் முக்கிய செயற்பாட்டளரான குமாருக்கு குடியுரிமையினை மீள வழங்க இத்தனை இழுத்தடிப்பு. சட்டம், நீதி என்பது இலங்கையில் எப்போதும் நாட்டை கொள்ளை அடிப்பவர்களை பாதுகாப்பதற்கே ஒழிய; மக்களுக்கோ இன்றி மக்கள் நலன்களிற்க்காக செயற்படுபவர்களிற்கு அல்ல என்பதே உண்மை