வருகின்ற மே மாதம் 23ம் திகதி (23rd May 2015) சனி அன்று "வெல்வோம் அதற்க்காக....! புத்தக வெளியீட்டு நிகழ்வு லண்டனில் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வு குறித்த மேலதிக விபரங்கள் மிக விரைவில் அறியத் தருகின்றோம்.
"எண்பத்துமூன்று (1983) ஆடி இனக்கலவரம். இனவெறி அரசின் காடைத்தனம் கண்டு பொங்கி எழுகிறார்கள். இனி இது பொறுப்பதில்லை என்று ஆண்களும், பெண்களும் வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள். மக்களிற்காக, மண்ணிற்காக மரணத்தையும் எதிர்கொள்வோம் என்று அலை அலையாக எழுந்தார்கள். பெற்ற தாய், தந்தையரை விட்டு, காதலுக்குரியவர்களை விட்டு, கைக்குழந்தைகளைக் கூட விட்டு விட்டு இனி ஒரு விதி செய்வோம் என்று விண்ணதிர வந்தார்கள். பாசம் அறுத்து, நேசம் மறந்து, ஆசை துறந்து நம்தேசம் மீட்போம் என்று வெஞ்சமர் புரிய வந்தார்கள்."
அப்படி வந்த ஒரு போராளி, விடுதலையின் பேரால் தனக்கு நடந்த சித்ரவதையினை, கொடூரத்தை, கொடுமைகளை நூலாக எழுதியுள்ளார்.
-முன்னணி வெளியீட்டகம்.
"வெல்வோம்-அதற்காக": மரணத்தின் வெளிகளில் வாழ்ந்த ஒரு போராளியின் பதிவுகள்!!
"வெல்வோம் அதற்காக...!" புத்தக வெளியீடு
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode