தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் இடதுசாரிய முன்னணி சார்பாக யாழ்ப்பாணத்தில் "இடதுசாரிய மக்கள் சந்திப்பு" நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்க்காக வருகை தந்துள்ளார்.
இன்று காலை ஊடகவியளாலர் சந்திப்பு ஒன்று இடம்பெற்று முடிந்துள்ளது. குடா நாட்டின் அனைத்து ஊடகவியளாலர்களும், பத்திரிக்கைகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உதயன், சக்தி, ஜ.ரி.ன், வலம்புரி, தினக்குரல், வீரகேசரி, தினகரன், ஆதவன், லேக்கவுஸ், தமிழ் மிறறர், சிரச, சூரியன் எவ்எம் ஆகிய ஊடகங்களை சேர்ந்த ஊடகவியளாலர்கள் கலந்து கொண்டனர்.