"ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடாத்துமாறு" ரவூப் ஹக்கீம் அரசிடம் கோருகின்றார்.
மக்களை இனம் மற்றும் மதத்தத்தின் பெயரில் பிரித்து பிழைக்கின்ற பிழைப்புவாதிகள் தான், எந்த தேர்தலை முதலில் வைப்பது லாபம் என்று சொந்த கணக்குகளைப் போடுகின்றனர்.
முஸ்லிம் மக்களின் நலன், அவர்களின் பிரதிநிதித்துவம் என்று கூறிக் கொண்டு பேரம் பேசும் இன-மத பிரிவினைவாதம மூலம் அனைத்து நவதார உலக கொள்ளைகாரர்களுக்கு நாட்டை இன்னும் இன்னும் சுரண்டவும் சூறையாடவும் திறந்து விடுகின்றனர். அதே நேரம் தங்கள் குடும்பச் செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் பிழைப்பு வாதத்தை நடத்துவதே, ரவூப் ஹக்கீம் போன்றவர்களின் கடந்தகால மற்றும் நிகழ்கால வரலாறாகும்.
இதற்கு வெளியில் இவரை நம்பி இருக்கின்ற முஸ்லீம் உழைக்கும் மக்கள் பெற்றது எதுவும் கிடையாது, மாறாக இருப்பதை இழப்பதே நடந்தேறுகின்றது.