கல்வி, மருத்துவத்துறையினர் அடுத்த வாரம் தொடர் ஆர்ப்பாட்டம்! அரசு அதிர்ச்சியில்
தமது கோரிக்கைகளுக்கு அரசு உடனடித் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அடுத்தவாரமளவில் பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் களமிறங்குவதற்கு மருத்துவம், கல்வி ஆகிய துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் அவசர முடிவொன்றை எடுத்துள்ளன. இதனால் கல்வி, மருத்துவத்துறைப் பணிகள் அடுத்த வாரத்தில் முற்றாக ஸ்தம்பிதமடையும் அபாயநிலை காணப்படுகின்றது.