மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதிச்சது போலை, கடன்பட்டு கஸ்ட்டப்பட்டு வெளிநாட்டுக்கு வந்த எங்கட மக்களை ஏமாற்றி, பண மோசடி செய்து, வீடு மேல வீடு வாங்கி, தனக்குச் சொத்து சேர்த்து, தன்னை நம்பி வந்த மக்களை நடுறோட்டில விட்டிட்டு..! கள்ள வழியால் தப்பிவந்த ஒரு வழக்குரைஞரின் மோசடிகள் அம்பலத்துக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிஞ்ச விடயந்தானே பாருங்கோ..? அவரைச் சட்டம் சும்மா விடேல்லை, தண்டனை முடிஞ்சு அவர் வெளியாலை வந்தாலும் தன்ரை நிறுவனத்தை இழந்ததாலை, அவரிப்ப தனது துணைவியோட சரவணபாபாச் சாமிக்கு சாமரம் வீசுவதுடன், அந்த ஜிலேபிச் சாமியின் கால்களைக் கழுவி அந்த ஊத்தையைக் குடிக்கினம். அந்தச் சாமிக் கள்ளன் தனக்கான சொத்துக் குவிப்பதற்காக, இவர்களையும் சேர்த்துக்கொண்டதாலை ஆளாளுக்கு மாறிமாறி உதவியளைச் செய்து, அப்பாவி மக்களை பேக்காட்டி சொத்துச் சேர்க்கினம்.