நிமலருபன் மரணத்திற்கு நியாயம் வேண்டும் - வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2.30மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 'அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான அமைப்பு' அழைப்பு விடுத்திருந்தது.
நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிமலரூபனின் படுகொலை மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலர் கட்சி, மத பேதம் பாராது கலந்து கொண்டதுடன், அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பலைகளையும் வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அமைப்பாளருமான மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டார்,