புத்தூர் கலைமதி-போராடும் மக்களும் இலங்கையின் ஊடக பிக்பாசுகளும். ஒருநாள் காட்சி .
யாழ். ரயில் நிலையம் மற்றும் பேரூந்து நிலையம்:
காலை 6.55 . 15.10.2017
எங்கும் சிங்கள மொழிக் குரல்கள். சிங்கள மொழிபேசும் சகோதர சகோதரிகள் நாகரீக உடைகளின் தமது லேப்டாப் பைகளை அழகாகத் தம் தோழ்களில் தொங்க விட்டபடி ஓட்டோ ரிக்ஸாகளில் ஏறி நகரின் பிரபல நட்சத்திர விடுதிகளுக் சொல்லுமாறு பணிகின்றனர். இவர்கள் அனைவரும் தெற்கின் புத்தி சீவிகளும் கலைஞ்யார்களுமாம். இவர்கள் திரைப்படம், கவிதை, அரசியல், சமூகவியல் , மனித உரிமைகள் போன்ற அனைத்து வியங்களிலும் வித்தகர்களாம். அதைவிட அவர்களிற் பலர் இலங்கையின் பிரபலமான பத்திரிகை நிருபர்களும், பத்தி எழுத்தாளர்களுமாம் . யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவுக்காக சில நாட்கள் யாழில் உள்ள நட்சத்திர விடுதிகளில் முகாமிடவுள்ளனராம்.
யாழ்.பஸ் நிலையம் :
காலை 8.00.
மூன்று சிறுவாகனங்கள் யாழ். பஸ் நிலையத்தை சுற்றி வருகின்றன. தாம் தேடியது காணக்கிடைக்காதவர்களாக, ஆட்டோ ஓட்டுநர்களிடம் புத்தூர் மயானதுக்கு எதிரான போராட்டம் எங்கு நடக்கிறதென விசாரிக்கின்றனர். விசாரணையில் எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. அவசர அவசரமாக யாழில். உள்ள தமக்கு தெரிந்தவர்களுடன் தொலைபேசி ஊடே தொடர்பு கொள்கின்றனர். இவர்களும் தெற்கில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், இவர்கள் பல்லினத்தவர்கள். இடதுசாரிக் காட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள். பூத்தூரில் உள்ள கலைமதி கிராமமக்கள் அவர்களில் ஊரின் நடுவில் இருக்கும் மயானத்தை அகற்ற போராடுகின்றனர். தமிழ் தலைமைகள், சமுக தலைவர்கள், மாகாண சபை அதிகார வர்க்கங்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாததனால், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்றை யாழ் . மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண சபைக்கு முன்பாக நாடாத்த வந்துள்ளனர்.