போரும் அரசியலும்
உலகில் உள்ள அனைத்தையும் விட மனிதர்களே மேலானவர்கள். மனிதர்களுக்கு நிகரான ஒன்றை இவ்வுலகில் எங்குமே காணவியலாது. பிரபஞ்சத்தில் இருந்து உருவாகிய இவ்வியற்கைப் பூவுலகில் மனிதர்கள் தோன்றி வளர்ந்து யாவற்றையும் உருவாக்கி வந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இணைந்தும் போராடியும் கட்டுப்படுத்தியும் தமக்கானவற்றைப் படைத்து வந்திருக்கின்றார்கள். உணவு, உடை, இருப்பிடம், மொழி, மதம் பண்பாடு போன்றவற்றை உருவாக்கி வளர்தெடுத்தெடுத்து வந்திருக்கின்றார்கள்.