அணுமின்பிறப்பாக்கிகளும் அவலங்களும்..
புயல் , மழை, இடி, மின்னல், சுனாமி போன்றவாறான இயற்கைச் சீற்றங்கள் கொண்டு வரும் ஆபத்தை அவற்றின் இயல்புகளை பேரோசை மூலமோ அல்லது அசாதாரணக் காட்சிகள் மூலமோ அவற்றின் ஆற்றலையும் விளையவிருக்கும் ஆபத்தையும் மனிதன் தனது புலனுணர்வுகளால் அவை நடக்கும் கணங்களில் அறிந்து கொள்ள முடியும். அதன் ஆற்றலை சக்தியை மட்டிட்டு தன்னையோ மற்றவர்களையோ அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த முடியும். அவை சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் காரணமாக புலன்களுக்கு புலப்படுபவை.