பத்திரிகையினதும்-குடும்பத்தினதும் நண்பர் ஒருவருக்கு ஜென்னி மார்க்ஸ் எழுதிய ஓர் கடிதம் (பகுதி-2)
எம் வாழ்க்கையின் ஒருநாளை இருந்தது இருந்தபடி சித்தரித்துக் காட்டுகின்றேன்:
இதைப் பார்த்தால் இத்தகைய இன்னல்களை நாடு கடத்தப்பட்ட சிலரே அனுபவித்திருப்பர் என்பதைக் காணலாம். செவிலித்தாய் அமர்த்துவது என்றால் மிகவும் செலவாகுமாதலால், எனது மார்பிலும் முதுகிலும் தொடர்ந்து பயங்கரமான வேதiனை இருந்தபோதிலும், குழந்தைகளுக்கு நானே பால் ஊட்டுவது என முடிவு செய்தேன். ஆனால் இந்தப் பச்சைக்குழந்தை பாலுடன் சேர்ந்து அளவற்ற கவலையினை – அடக்கி மூடப்பட்ட வருத்தங்களையும் சேர்த்துப் பருகியதால், இரவும் பகலும் பர்pதாபகரமாக கஸ்டப்பட்டபடி இருந்தது. இந்த உலகிற்கு வந்தநாள் முதல் அவன் ஒரு இரவிலாவது, இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் நிம்மதியாக தூங்கியதில்லை. அண்மையில் அவனுக்கு கடுமையான வலிப்புக்கள் வரத்தொடங்கின. வாழ்விற்கும் சாவிற்கும் இடையே அவன் எப்போதும் போராடிக்கொண்டு இருந்தான். அவனுக்கிருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியதன் ;விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி தோல் வெடித்து, நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது. இவ்வாறு ஒருநாள் அவனுடன் நான் அமர்ந்திருந்தபோது எங்கள் வீட்டு நிர்வாகத்தை பார்ப்பவள் உள்ளே வந்தாள்.