புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு, ஏகாதிபத்திய சூழ்ச்சி உள்ளது என்று சொல்வதெல்லாம் அரசுக்கு ஏற்பட்டுள்ள நோய்! புபுது ஜாகொட
பிரச்சினைகளுக்கு பதில் வழங்குவதற்கு பதிலாக பூச்சாண்டி காட்டும் அரசியலை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.