திருமணங்கள் “சொர்க்கத்தில்” நிச்சயிக்கப்படுகின்றன என்கின்றார்கள். இலங்கையில் அதை பொலிசார் நிச்சயிக்கின்றார்கள்!
செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 21-06-2010
இவ்வுலகில் போராட்டம் தவிர வேறும் பல உள்ளன –கோத்தபாய
புனர்வாழ்வு அளிப்பதன் மூலம், புலி உறுப்பினர்களுக்கு சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
வெலிகந்த சேனபுர புனர்வாழ்வு மையத்தில் வீட்டு மின்சாரப் பொறியியல், மேசன்வேலை, தச்சுவேலை, நீர்க் குழாய் பொருத்துதல் போன்ற பல்வேறு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 300-ற்கு மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டள்ளன. இந் நிகழ்விலேயே கோத்தபாய மேற்கண்டவாறு குறிப்பிடடுள்ளார்.