‘மகிந்த சங்க’ கோமாளி (நக்கீர) புலவர்கள்!
13-வது திருத்தத்திற்கு ‘அப்பால் — இப்பால்’ பற்றி பாராளுமன்றத் தெரிவுக்குழுவே தீர்மானம் எடுக்கும்!
தெற்கு மக்கள் அதிகாரப் பரவலை எதிர்க்கவில்லை! கிழக்கு மாகாண அமைச்சர் விமலவீர திசநாயக்காவும் அவர்களுக்கு மேல் ஒருபடி சென்று கிழக்கு மாகாண முதல்வருக்கு கருணா எச்சரிக்கை விடுத்துள்ளதும் யாவரும் அறிந்ததே.
இந்த இழுபறிகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. நீங்கள் தெரிவுக்குழுவில் என்ன பணியாரம், அப்பம் சுடப் போகின்றீர்கள் என்பதும், உது குரங்கு அப்பம் புறித்த கதையாகத்தான் முடியும் என்பதும், ஊர் உலகறிந்ததே!
இந்தப் பணியார அப்பப் பறிப்பு விளையாட்டில் தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது’ மறந்துபோய் சொல்லியுள்ள ‘இவ்வுண்மைக்கு’ ஏனிந்த விக்கிரமாதித்தன் கதை விளக்கங்கள்.