பெரியாரின் பெயரில் பெண்களுக்கு நிகழும் அவலம்
பெரியாரின் பெயரில் ஆணாதிக்கம். பெரியார் பெண்ணை சுய உணர்வுள்ள மனிதனாக முன்னிறுத்தியவர். பெண் ஆணின் அடிமையுமல்ல, ஆணின் காமப் பொருளுமல்ல என்றவர் பெரியார். சுயமரியாதையுள்ள, பகுத்தறிவுள்ள பெண்ணாக (மனிதனாக), தமிழகத்துக்கு அறிமுகம் செய்தவர் பெரியார். இதனால் தான் தமிழகம் பெரியாரின் மண்.
இப்படி அறிமுகம் செய்த பெண்ணை உடலாக, பாலியல் பண்டமாக, ஆபாசப் பொருளாக, ஆணிண் பாலியல் தேவைக்கு ஏற்ற சரக்காக முன்னிறுத்திய ஒரு பொறுக்கி தான் வைரமுத்து. தமிழைக் கொண்டு பெண் குறித்த பெரியாரின் கருத்தை தமிழகமெங்கும் குழிதோண்டி புதைத்ததுடன், பெண்களை இழிவுபடுத்தியவன். பார்ப்பனிய சிந்தனையானது ஒரு பெண்ணை எப்படி பார்க்கின்றதோ, அதை தமிழ் மொழியைக் கொண்டு முன்னிறுத்தியவன் வைரமுத்து.
பெரியாரிஸ்ட்டுக்கள் என்று கூறிக் கொள்ளும் பலரும், தமிழை முன்னிறுத்தி பெரியாரை தோற்கடித்த அந்தப் பார்ப்பனிய ஆணாதிக்கத் தமிழை, "தமிழுக்கு செய்த" தொண்டு என்று போற்றுகின்றனர். தமிழனாக முன்னிறுத்தும் பெரியாரிஸ்டுகளும், இனவெறி பிடித்த தமிழ் பாசிட்டுகளும் கூடி, பெரியாரை அவர் போராடிய மண்ணில் தூக்கி எறிவது நடந்தேறுகின்றது.
எந்தப் பெரியாரை தமிழகத்தில் தோற்கடிக்க பார்ப்பனியம் போராடுகின்றதோ – அதை பெரியாரிஸ்ட்டுகள் என்று கூறிக்கொள்வோர் மூலம் செய்திருக்கின்றது. அதை தமிழ் என்று முழங்கும், இனவெறியர்கள் மூலம் செய்திருக்கின்றது. சின்மயி பெரியார் முன்வைத்த பெண்ணாக மாறி, தமிழகத்தின் போலி ஆணாதிக்க முகத்தை கிழித்தெறியும் பெரியாரியப் பெண்ணாக காட்சியளிக்கின்றார்.
சின்மயியின் தன் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான குரல், போலி பெரியாரிஸ்ட்டுகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும், ஆணாதிக்கவாதிகளும் எதிரானதாக பரிணாமடைந்திருக்கின்றது.