அரசியல் கைதிகள் - காணாமல் போனோரை விடுவிக்கக் கோரி யாழில் போராட்டம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
12 Feb 2015
- Hits: 3542
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்!
காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்களை வெளிக்கொண்டுவா!
உடனடியாக தோழர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை அங்கீகரி!
ஆகிய கோசங்களை முன்னிறுத்தி முன்னிலை சோசலிசக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக நாளை வெள்ளிகிழமை13.02.2015 அன்று யாழ்ப்பாணத்திலும் கையெழுத்திடும் போராட்டத்துடன் கூடிய, அதிகார எதிர்ப்பு நிகழ்வை நடத்த இருக்கிறது.
இப்போராட்டத்தில் ஜனநாயக விரும்பிகள், மக்கள் நலனுக்காகப் போராடுபவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் சக்திகள் அனைவரையும் தோழமையுடன் பங்கேற்குமாறு முன்னிலை சோசலிசக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
போராட்ட விபரம்:
இடம் : யாழ். பஸ் நிலையம்
காலம் : வெள்ளிகிழமை 13.02.2015
நேரம் : 9.00 மணி தொடக்கம் .