Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வெலிவேரிய தந்த நீர்?

 

வெல்வேரிய தந்த தண்ணீர்

அப்பூமியின் ஆதி ஆதியிருப்பு- தங்கம்போல்

நிலத்தடிநீர், நீர்ஊற்று, சலசலத்துச் செல்லும் ஆறுகள்

அனைத்தும் அவ்வகையே!

 

அழியாச் சிதைவடையாச் செல்வங்கள் அவை

வாழ்வின் ஆணிவேர்கள்-கோடிக்காலங்கள் நிலைத்திருக்கும் 

பாதாளம்வரை விசம்பரவாவிட்டால்!

 

அவர்களது உற்பத்தி முறையில் மக்கள் நலன்

கணக்கில்லில்லை, லாபமே மகா ஏக்கம் 

அதன் கணக்குத்தான் கச்சிதம்

 

வெலிவேரிய மக்கள் எழுந்தார்கள்

;விசமற்ற நீர் எமக்கு வேண்டும்

விசமூற்றுபவனை அகற்று-என

 

“தாகத்திற்கு தண்ணீர் கேட்பவனை 

இல்லையென அனுப்பிவிடாதே, இது

வறண்ட வலய மனிதநேய வழக்கொன்று

 

போத்தல் தண்ணீரை வகைவகையாகச் சுவைத்து

ஏப்பம்விடும் அதிகார வர்க்கமொன்று 

 

நாலுபேரை தட்டிவிட்டால் அடங்கிவிடும்

இது வளர்ந்துவிடக்கூடாது-என்ற

அதிகாரத்திமிர் ஆணையின்படியே

 

வெலிவேரிய மண்ணில் குருதி சிதறியது

கபடநாடகம், நரித்தனங்கள்

அரசத்தலைவனும்

 

அதிகாரிகளும் சேர்ந்து நடித்தார்கள்!

வுpசாரணை, இராணுவ ஒழுக்கம்மென

பூசிமெழுகும் பேச்சுக்கள் அரங்கேறின

 

மாண்டவர்களின் குருதிக்கலங்கள்

ஒவ்வொன்றாக எழும், எச்சரிக்கும்!

பேசிக்கொண்டேயிருக்கும்- சிலவேளை

நச்சுக்கூடங்கள் நொறுங்கும்வரை

 

திலக்

11.8.2013