Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாரதமும் பார்வதி அம்மாவும்

காந்தியின் ராட்டையில் நூலாகிப்போவது
எங்கள் இரத்தமும் தசையும்
ஆசிய வேந்தர்கள் முடியினில் சூடிக்கிடப்பது
அயலுறவுக் கொள்ளையும் திமிரும்

 

மனிதம் கண்மூடி குருதியில் கழித்து ஆண்டொன்று
பதவியே குறியாகிய பாதகர் நடிப்பினில்
இறுதிக் கணம் வரை ஏமாந்துபோன இனம்
நோயுற்ற தாயின் வேதனையில்
கோலோச்சும் வாக்குப் பொறுக்கிகளிடம்
காருண்யம் காண்பது முட்டாள்தனம்

போரினில் தர்மமும் நீதியும் உணவுப் பொட்டலமாய்
எங்கள் கனவினைச் சிதைத்தது

 

 

வெற்றுவேட்டுக் கூச்சலிடும் முதலமைச்சர் வேடம்
கடிதத் தூதுகளாய் கடந்து போனது
சொந்த இனத்தின் அவலம் நந்திக்கடல்வரை
செம்மொழித் தலைவர்--உறவுகள்
மந்திரிப் பதவிக்காய் டில்லியில் அழுதது


மைந்தரின் பின்னராய் அன்னையின் நோயிலும்
வாக்கு அரசியல் போட்டி நிகழ்கிறது

தொப்புள்கொடி உறவெலாம் பொய்யடா-தமிழா
தோழமை உணர்வொன்றே அகிலமெலாம் மெய்யடா