Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்...

சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப்
பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்...
மக்கள்திரளொடு மாத்தளன் மண்ணிலேதின்றவர்
கண்ணிலேஎன்னே கருணைஒளி பாரடா
வாக்குப்பொறுக்க தெறிக்கும் வார்த்தைகள் அமிர்தமாய்
காற்றில் மறையா கந்தகவாடை
முள்ளிவாய்க்கால் சேற்றினில் மூடிய சேதிகள்
தேர்தல் பேச்சொடு மாளுமோ.....

அரசரும் தளபதியும் பொற்காசுப் பொதியுடன்
அரியணைக்கனவொடு மந்திரிகள்
வெற்றிலையும் அன்னமும் சன்னம் துளைத்த மதில்களெலெல்லாம்
இழந்தெழுந்து முச்சுவிட எதிரிலே கொன்றவர்
சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததா
மக்களை நம்பு எனும் விதியடா தமிழா......

 

வீட்டினில் கிடந்தழ வீதிமண் அள்ளித்தூற்றி-எமை
நட்டாற்றினில் விட்டவர் கேட்டினைச் சொல்லமுதல்
வாக்கினைக் கேட்டு வாறான்
நாட்டினை வென்றெடுக்க நம்பிள்ளை கொடையென்றான்
சோற்றினை இழந்தபோதும் சுதந்திரம் பெரிதுவென்றான்-இன்றோ
பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்...

வெடியொலி அறியார் வேதனை ஏதறிவார்
விமான இருக்கைகள் தரமறிவார்
புலத்துமக்கள் பணத்திலே பருத்துத் தொந்தி
தமிழினக்கருத்துப்பேசி பாராளு மன்றப்பதவியில்
கொழுத்த கூட்டம் வெளுத்ததோ தேர்தலோடு
இல்லையில்லை அடுத்த தேர்தலிற்கும் அத்திவாரம்...
மாற்று தேவைதான்-- அது கருணாரட்ணவல்ல
மக்கள் எழுச்சியே.........