Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தனியாருக்கான ஓய்வூதியம்: இலங்கை அரசும் உலக வங்கியும் சேர்ந்து நடத்தும் திருட்டு

அனைவருக்குமான ஓய்வூதியத்தை மறுத்தும், ஆயுள் பூராவுமான ஓய்வூதியத்தை மறுத்தும், இறந்தால் குடும்ப உறுப்பினர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியாதவாறு மறுத்தும் ஒரு ஓய்வூதியம். இப்படி தனியார் ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் அவர்கள் கொடுக்க முனைவது, பிச்சைக்காசுதான். இந்த பிச்சைக் காசைக் கொடுக்க, அரசு தன் நிதி எதையும் கொண்டு முன்னெடுக்கவில்லை. மாறாக ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் சிறுகசிறுகச் சேர்த்த பணத்தை, அரசு தனதாக்கி அதைக்கொண்டு பிச்சை போடும் திட்டத்தைத்தான் ஓய்வூதியமாக அரசு அறிவிக்கின்றது. உலக வங்கியின் உத்தரவுக்கு அமைவாகத்தான், இதையும் கூட முன்னெடுக்கின்றது.

Read more ...

தமிழ் மக்களை அரசியல் அநாதையாக்கும் தமிழ் பாராளுமன்றவாதிகள் ...!

இலங்கையில் ஒரேயொரு தேசிய இனமே உண்டு என்று கூறி, ஒடுக்கும் பேரினவாதம் தான், தமிழினவாதத்தை தொடர்ந்து உருவாக்கின்றது. தமிழ் பாராளுமன்றவாதிகளோ, இதை குறுகிய தமிழினவாதமாக மாற்றிவிடுகின்றனர்.

Read more ...

பிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்..(பகுதி -1)

பின்லேடன் கொலை!

சர்வதேச நாடுகள் எங்கிலும் சல்லடைபோட்டுத் தேடப்பட்டு வந்த ஒருவர் பில்லேடன். அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் முதல் நபராக இவர் இடம்பெற்றும் இருந்தார். இவரை அண்மையில் அமெரிக்க சிறப்புப்படையினர் சுட்டுக் கொன்று விட்டதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. எப்படி இலங்கையில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்திகள் வெளிவந்தபோது, அவரது ஆதரவாளர்களால் நம்பமுடியாமல் திகைத்துப்போய் இருந்தனரோ, அதேமாதிரி பில்லேடனின் ஆதரவாளர்கள் மத்தியிலும் இது காணப்பட்டது. பின்லேடன் உலகநாடுகளை எல்லாம் மிரட்டிக்கொண்டிருந்தாரோ இல்லையோ, அமெரிக்காவின் கண்களில் தன் விரலைவிட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார் என்பது மிகையாகாது.

Read more ...

நடையண்ணை பறைஞ்சா – கதை கேட்டவர் முத்தையா (பாகம்: 2)


அண்ணை கேக்கிறன் எண்டு குறை நினையாதையுங்கோ. ஏனண்ணை கொஞ்சம் முகம் வாட்டமாய் சோந்துபோய் வாறியள்.

எனக்கு வாற விசருக்கு நீயும் பத்தாக்குறைக்கு என்னிட்டை வாங்கிக் கட்டப்போறாய்.

அப்ப நான் கேட்டது சரியாப் போச்சு ஏதோ கொதிப்பில தான் வீட்டிலயிருந்து நடையண்ணை நடையைக் கட்டியிருக்கிறியள். என்ன ஏதும் விசயம் பாரதூரமே.

சோத்துக்கு வழியில்லாமப் பண்ணியிட்டாங்களடா என்னை, என்ரை மனிசியும் பிள்ளையளும்.அவங்கள் இண்டைக்கு சமைக்கேல்ல.

ஏன் என்ன? வீட்டில நீங்கள் ஏதாவது நெருப்பெடுத்திருப்பியள் மனுசி சமையல்ல ஸ்ரைக் அடிச்சிருப்பா. உங்களுக்கு இப்ப வயிறு பசியில காந்துது அதுதானே விசயம்.

நிப்பாட்டு. நீ அதுக்குள்ள உன்ர கற்பனையை கன்னா பின்னா எண்டு ஓடவிடாதை. அவங்கள் இண்டைக்கு வீட்டில ஏதோ பாபகியூ எண்ட கண்டறியாத ஒண்டை செய்து போட்டு வெந்ததும் வேகாததுமா இறைச்சியை வாட்டி எடுத்து திண்டாங்கள். நாசமாப் போக. எனக்கு ஒரு பருக்கை சோறில்லாமல் தலை சுத்துதடா தம்பி.

Read more ...

அவதாரங்கள் இறக்கிறார்கள், கைதாகிறார்கள்!

அய்யாமுத்து பூசையிலே மனமுருகி நின்றான். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி பக்தி என்ற இன்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, அவனிற்கு முன்னாலே நின்றவர்கள் ஏதோ பெரிதாக கதைத்து அவனது சிந்தனையை குழப்பி விட்டார்கள். வகுப்பறையிலே பெடியன்கள் சத்தம் போட்டால் தமிழ் படிப்பிக்கும் நாகலிங்கம் வாத்தியார் சொல்லும் “காவோலையிலே நாய் ஒண்ணுக்கு அடிக்கிற மாதிரி சளசளக்காதேயுங்கடா” என்பது ஞாபகம் வந்தது. முன்னிற்கு நிக்கிறவர்கள் பூசையையும் கவனிக்காமல் அப்படி என்ன கதைக்கிறான்கள் என்று காதைக் கொடுத்துக் கேட்டான். இப்ப எவ்வளவு போகுது என்று ஒருத்தன் மற்றவனை கேட்டுக் கொண்டு நின்றான். யாழ்ப்பாண முறைப்படி செய்யப்படும் காரம், குணம், மணம் நிறைந்த மிளகாய்த் தூள் போட்ட கறியை ஒவ்வொரு நாளும் போட்டுத் தாக்குவதால் மூலக்கொதி வந்து அல்லல்படும் அய்யாமுத்துவிற்கு இதைக் கேட்டதும் கொதி உச்சந்தலை வரைக்கும் ஏறியது. ஏண்டா இதையெல்லாமாடா அளக்கிறது. அதையும் கதைக்க இடமில்லாமல் கோயிலிலை வைச்சா கதைக்கிறது எண்டு அவங்களைப் பார்த்து கத்தினான். வங்கியிலே வட்டி வீதம் எவ்வளவு போகுது என்டதை கோயிலிலே வைச்சு கேக்கக் கூடாதோ என்று அவங்கள் அய்யாமுத்துவை பார்த்துக் கேட்டார்கள்.

 

Read more ...

இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்புகள்..! – (பகுதி4- இறுதிப்பாகம் )

இலங்கை மக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான புதிய இராணுவ முகாங்கள்...

மக்களைக் கண்டு அஞ்சும் மகிந்த அரசு, இராணுவத்தை பலப்படுத்தி நாட்டை இராணுவ மயமாக்குகின்றது. நாடு முழுக்க ஏற்கனவே இராணுவ மயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதியதாக நூற்றுக்கணக்கான புதிய இராணுவ முகாங்களை நிறுவவுள்ளதாக மகிந்தா குடும்பம் அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கிலோ கெடுபிடியான இராணுவ ஆட்சி தான் ஏற்கனவே நடக்கின்றது. இராணுவத் தலையீடு இல்லாத சிவில் சமூக நிகழ்வுகள் அங்கு கிடையாது. இதை மீறி நடந்தால் அதை சட்டவிரோத செயலாகவும், இராணுவத்துக்கு எதிரான சதியாகவும் கூறி, அதற்கு எதிராக இராணுவத்தைக் கொண்டு கெடுபிடிகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவுகின்றது.

வடக்கு நோக்கி செல்லும் பெரும் வீதிகளில் உள்ள தேநீர் கடைகளைக் கூட மக்களிடம் விட்டுவைக்காது, அதை இராணுவம் தான் நடத்துகின்றது. வடக்குக்கிழக்கில் இராணுவம் தலையிடாத எதுவும் கிடையாது. புத்தர் சிலையை ஆங்காங்கே நிறுவுவது, வடக்கு கிழக்கு மக்களின் ஆதி வரலாற்றை மாற்றி எழுதுவது என்று, எங்கும் இராணுவம் தன் மூக்கை நுழைத்து வருகின்றது.

Read more ...

எப்போதும் வயல் விளைக்க..!

உச்சி மீது குத்தி வீழ்ந்த சூரியன்
சடலமாய்க் கிடந்து தகிக்கின்றான்
எந்தன் காய்ந்த தலை முகட்டில்.

நேற்றுப் பெய்த அடைமழையால்
எங்கு பார்த்தாலும்
பச்சைப் பசேலென்ற பற்றைக் காடுகள்.
ஆனாலும்..,

Read more ...

இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்புகள்..! – (பகுதி3)


மாணவர் - ஆசிரியருக்கான கட்டாய இராணுவப் பயிற்சி இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்பாகும்...

மகிந்தா குடும்பம் வடக்குக் கிழக்கில் திணித்துள்ள இராணுவ ஆட்சியை, இலங்கை முழுக்க நடைமுறையாக்கும் படிக்கல் தான் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டாய இராணுவப் பயிற்சியாகும். வடக்கு கிழக்கு உற்பத்திப் பொருட்களை தன் இராணுவ ஆட்சி மூலம் மலிவு விலையில் வாங்கி, அதை மலிவாக சிங்கள மக்களுக்கு விற்றதன் மூலம், முதலில் இலங்கையில் இராணுவ ஆட்சியின் அவசியத்தை புரியவைக்க முனைந்த இந்த பேரினவாத அரசுதான், இன்று கட்டாய இராணுவப் பயிற்சியை மாணவர்களுக்கு திணித்த அரசு, அடுத்து அதை ஆசிரியர்களுக்கு திணிக்கவுள்ளது. மகிந்த முன்தள்ளும் பாசிச சிந்தனையின் மகத்துவம் இதுதான்.

நாட்டை இனி மகிந்த குடும்பம் தான் பரம்பரை பரம்பரையாக ஆளவேண்டும். இதுதான் மகிந்த குடும்பத்தின் சிந்தனையாகும். மன்னர்கள் போல் தாமும் பரம்பரை பரம்பரையாக ஆட்சி அதிகாரத்தில் வாழ வேண்டும், இதனால் மன்னர்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றனர். வரலாற்றுப் புரட்டுகள் திணிக்கப்படுகின்றது. மன்னர்களை பேரினவாதத்தின் அடையாளமாகக் காட்டி, தங்கள் பேரினவாத பாசிச ஆட்சியை அதன் தொடர்ச்சியாககாட்டி அதைத் திணிக்க முனைகின்றனர்.

Read more ...

அபலை…. (சிறுகதை)

ஐயோ….ஐயோ.. ஏன் இந்த வாழ்க்கை…எனக்கு…     கடவுளே இந்த ஊரிலே வந்து வாழ்வதை விட நான் செத்துத் தொலைச்சிருக்கலாம். கேவலம்….  வெட்கம் விட்டு போய்ச் சரணடைந்தேனே..

அப்பவே களுத்திலிருந்த சயினற்றை அடிச்சு கதையை முடிச்சிருக்க வேணும், மாதினியைப் போல் மித்திரா போல் களத்திலேயே உடனே உயிரைத் துறந்திருக்க வேண்டும். மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எனக்கு வந்திருக்கவே கூடாது. ஒரு முறையல்ல, இருமுறையல்ல, பலமுறைகள் தன் தலையில் அடித்தபடியே கதறிக் கதறிக்  அழுதழுது குளறிக் கொண்டிருக்கிறாள்.

Read more ...

இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்புகள்..! – (பகுதி2)

 

 

 

2.யுத்தத்தின் பின் பௌத்தமூலம் தமிழினத்தை அழிக்கின்றது...

யுத்தத்தின் பெயரில் ஓர் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், யுத்தத்தின் பின் அதை நிறுத்திவிடவில்லை. ஆனால் அதன் வடிவத்தை மட்டும் மாற்றியுள்ளனர். 1940கள் முதல் எல்லையோரத்தில் திட்டமிட்டு நடாத்தி வந்த இன அழிப்புக் குடியேற்றம், யுத்தத்தின் பின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளுக்குள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பேரினவாதம் தன் இன அழிப்புக்கு, இன்று பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி முன்நிறுத்துகின்றது. அரசு தன்னை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்தி, பேரினவாதத்தை முன்தள்ளுகின்றது. ஆயுத மூலமான இன அழிப்பில் புலிகள் மீதான படை நடவடிக்கை மூலம் அழிப்புகள் முடிந்த நிலையில், பௌத்த மதத்தைக் கொண்டும் அதனைச் செய்கின்றது. யுத்தத்தின் பின்னான இன அழிப்பில் இன்று மதம் பாவிக்கப்படுகின்றது.

Read more ...

தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடம்!

“தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று 70-ம் ஆண்டு பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில் (யாழ் கச்சேரியில் இருந்து தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்டிருந்த) தமிழரசுக்கட்சித்தலைவர் செல்வநாயகம் கூறிய வாhத்தைகள் இது. தமிழ்ப் பகுதிகளில், இத் தேர்தலில் அமிர்தலிங்கம், நாகநாதன் போன்ற பெருந்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டதோடு, தென்னிலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்த காலம் இது. இதற்கு முந்திய இரு தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் உதவியுடனேயே மாறி மாறி வந்த ஸ்ரீலங்கா, யூ.என்.பி. அரசுகள் ஆட்சியமைத்திருந்தன. இக்காலங்களில் தாங்களே தென்னிலங்கை அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்திகள் எனக் கூறிவந்த தமிழரசுக்கட்சிக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் பேரிடியைக் கொடுத்து விட்டது.

 

Read more ...

இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்புகள்..! - (பகுதி1)

1.உங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்...

'உங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்" என்ற மகிந்த ராஜபக்சாவின் குற்றவாக்கு மூலத்தில் எதற்காக, எதைக் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்கின்றனர்? யுத்தக் குற்றம் எதையும் நாங்கள் செய்யவில்லை என்று கூறிவருகின்ற அரசு, மறுபுறம் உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்கின்றது. எதை? குற்றம் இழைக்கவில்லை என்றால், காட்டிக்கொடுக்க எதுவுமில்லை. காட்டிக் கொடுக்க ஏதோ இருக்கின்றது என்றால், அங்கு குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது.

"காட்டிக் கொடுக்கமாட்டோம்" என்று கூறி, குற்றம் நடந்ததாக சுயவாக்கு மூலம் தருகின்றது அரசு. ஆக அரசு குற்றமிழைத்ததை ஒத்துக்கொள்ளும் அதேநேரம், யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்கின்றனர்? சரி யாரை? இங்கு உங்களை என்று குற்றஞ்சாட்டி, அது நாங்களல்ல என்று தமது குற்றத்தை அப்பாவி இராணுவ வீரன் மீது சுமத்துகின்றது. இப்படி தங்களின் குற்றத்தை மூடிமறைக்க, பேரினவாத தேசிய வெறியை முன்னிறுத்தி குற்றத்தை மற்றவர்கள் மேல் அபாண்டமாக சுமத்துகின்றது அரசு. ஆக இங்கு காட்டிக் கொடுக்க ஏதோ இருக்கின்றது. யாரோ போர்க்குற்றத்தை இழைத்துள்ளனர் என்பதை, ஜனாதிபதி மகிந்தாவின் இந்தக் கூற்றும் உறுதி செய்கின்றது.

Read more ...

நிபுணர்குழு அறிக்கை மக்களுக்கு நீதியை பெற்றுத்தருமா?

அமெரிக்கா என்னடா..!   ஐ.நா. என்னடா..!
நான் நினைக்கிறதை செய்பவன். எனக்கு யார்
பற்றியும் கவலை இல்லை..,
என கோத்தபாயாவும்..,
மக்களையும் வெள்ளைக்  கொடியோடு
வந்தவர்களைக் கொன்றொழித்தது யார்?
பிரபாகரனை நாமா இல்லாதாக்கினோம்?
இதை நேர்கொண்டு கண்டது யார்?
நிபுணர் குழுவிற்கு மாலைக்கண்ணா?
அல்லது மஞ்சள் காமாளையா?
என மகிந்தாவும் குமுறுகின்றார்கள்.

Read more ...

இறந்தவர்களின் தோத்திரம்

அருள் நிறைந்த அம்மா வாழ்க
டெல்லி சர்க்காரும் சர்வலோகமும்
உம்முடனே இருக்கக் கடவதாக
பெண்களுக்குள் தமிழ்நாட்டில்
ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆனீர்
தமிழர்களின் திருவயிற்றின்
கனியாகிய கன்னித்தாயே
முள்ளிவாய்க்காலில் மரித்த எங்களுக்காக
எங்கள் மரணநேரத்திலும்
டெல்லி சர்க்காரை
சங்காரம் வேண்டாமென்று
வேண்டிக் கொண்ட தாயே
எங்கள் சந்ததியினருக்காக
நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்
எங்கள் சந்ததியினரை இரட்சித்தருளும்
அவர்களை அவர்கள் சித்தத்தில் வாழ அனுமதித்தருளும்.
முள்ளுக் கிரீடம் அணிந்து
சிலுவையில் அறையப்பட்டு
மரணித்தார் நாதர் இயேசு
நாங்கள் பிறருக்காய் மண்ணுக்குள்
மரணிக்கப்பட்டோம் தாயே.
உயிர்த்தெழுந்து நாங்கள் வருகிறபோது
தாயே உமக்கே தோத்திரம்
உண்டாகக் கடவது.

Read more ...