போராடுதல் மட்டுமே விடிவு தரும்!
- Details
- Category: இதழ் 27
-
14 Nov 2016
- Hits: 898
ஐந்து மாதங்களின் பின் போராட்டம் பத்திரிகை மறுபடியும் வெளிவந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள், வேறு பல முக்கிய அரசியல் வேலைகளினால் ஏற்பட்ட நேரமின்மை போன்ற காரணங்களால் இப்பத்திரிகையை கிரமமாக வெளிக்கொணர முடியவில்லை. பத்திரிகை வெளிவராத இந்த ஐந்து மாத காலகட்டத்தில், எமது சகோதர அமைப்புகள் பலதரப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன. அதேவேளை ஜனநாயகத்தையும், பொருளாதார சுபீட்சத்தையும் மக்களுக்கு வழங்கப் போவதாக கூறியபடி பதவிக்கு வந்த ரணில்- மைத்திரி அரசு எந்தவொரு மக்கள் நலக்கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. மாறாக, பொருளாதார உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும், குடியியல் உரிமைகளும் ஆட்சியாளர்களால் மக்களுக்கு மறுக்கப்படும் நிலைமையே நிதர்சனமாக உள்ளது.