Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆறு வருடங்களாக மறுக்கப்படும்- மறைக்கப்படும் குகன் - லலித் தோழர்களின் கடத்தலும் நீதியும் !

2009 போர் முடிவுக்கு வந்த பின்பு, போரின் முடிவில் அரசபடைகளால் கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை தோழர். குகன் மற்றும் லலித் வன்னியிலும் மற்றும் பிரதேசங்களிலும் திரட்டினார்கள். தெற்கில் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

இவர்களாலேயே ஆரம்பத்தில் வடக்குக்கு வெளியில் அரசியற்கைதிகள் பற்றிய தகவல்கள் தெற்கில் ஊடகங்களுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும்  வழங்கப்பட்டது. 

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் முன்னிலை சோசலிசக்  கட்சியில் இயங்கிய இருவரும், 2011 ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் நாள், யாழில் அரசபடைகளாலும் - அவர்களுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் ஆயுதக்குழுவினாலும் கடத்தப்பட்டார்கள்.

வவுனியாவைக் கடந்து வன்னிக்குள்  எவரும் அரசியல் நோக்கில் அல்லது மனித உரிமை சார்ந்த செயற்பாட்டு  நோக்கில் வரத்  தடை செய்யப்பட்டிருந்த மஹிந்த அரசின் ஆட்சியில், இவ்விருவரும் சர்வதேச மனிதவுரிமை நாளான மார்கழி 10 அன்று,  தெற்கிலிருந்து மக்களை வரவழைத்து அரசியற்கைதிகளை விடுவிக்கக்கோரும்  போராட்டமொன்றை யாழில் ஏற்பாடுசெய்திருந்த்னர்.

Read more ...

SAITM - உடனடியாக ரத்து செய் !

ஆகஸ்ட் 02 தேசிய எதிர்ப்பு தினத்தை வெற்றிகரமானதாக்குவோம். 

இந்த நிமிடம் வரை சைட்டம் திருட்டு பட்டக் கடையை ரத்து செய்யக்கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவ பீடங்கள் எட்டிலும் உள்ள விரிவுரையாளர்களின் தொழிற்சங்கங்கள், மற்றும் மாணவர்கள், அந்த மாணவர்களின் பெற்றோர்கள், பல்கலைக்கழக பொது மாணவர்கள், அரச மருத்துவ சங்கம், தொழிற்சங்கங்கள், மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸக் கட்சி, கூட்டு எதிர்க்கட்சி உட்பட பொது மக்கள் போராடுகிறார்கள்.

வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ரணில், மைத்ரி கூட்டு அரசாங்கத்திற்கு தேவையாக இருப்பது மருத்துவ பட்டத்தையும் மற்ற அனைத்தையும் போன்று விற்பனை சந்தையில் விற்று தின்பதற்கே.

நோயாளிகளின் உயிர் தொடர்பாகவோ, கல்வியின் தரம் தொடர்பாகவோ இந்த கொடிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை. அதனால் செவிட்டு யானைகள் போன்று தமது நடத்தையினால் வெளிக்காட்டி, சைட்டம் முதலாளியின் தாளத்திற்கு ஆடி , பொது மக்களை அடக்கி ஒழிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

Read more ...