"இந்த வேட்டையை ஆரம்பித்திருப்பது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை குறிவைத்தே."
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
19 Feb 2017
- Hits: 959
"சைட்டத்தை தடை செய்” இப்பொழுது நாடு முழுவதும் கேட்கக்கூடியதாகவும், காணக்கூடியதாகவும் உள்ள கதையாகும். மாலம்பே சைட்டம் பட்டக்கடையை தடை செய்யக்கோரி மாணவர்கள் நீண்ட நாட்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சைட்டம் பட்டக்கடைக்கு ஏன் நீங்களும், நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?
இந்த நிறுவனத்தில் மருத்துவ பட்டம் உட்பட இன்னும் ஏராளமான பட்டங்கள் பணத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய தொகைக்கு அல்ல, 120 இலட்சத்திற்கு மருத்துவ பட்டம் விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால் மிக தெளிவாக தெரிகிறது இந்த நாட்டின் விவசாயிகளின், ஆடைத்தொழிற்சாலை தொழிலார்களின், அரச சேவையாளர்களின், தனியார்துறை சேவையாளர்களின், தோட்டத்தொழிலார்களின், மீனவர்களின் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு இதற்கு செல்ல முடியாது என்பதே. மொத்த சனத்தொகையில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தினருக்கே இதற்கு செல்ல முடியும்.
குமார் குணரத்தினத்திற்கு மீள குடியுரிமையை வழங்கியமை அரசியல் உரிமைகளுக்கான மக்கள் போராட்டத்தின் முதல் வெற்றிப் படி!
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
02 Feb 2017
- Hits: 787
குமார் குணரத்தினம் தனது குடியுரிமையினை மீளக்கோரி விண்ணப்பித்த விண்ணப்பதை ஏற்று, அவருக்கு இலங்கை பிரஜாவுரிமையினை மீள வழங்கியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயாகொட இன்று ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவருக்கான பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் முன்னிலை சோசலிசக் கட்சியின் 2வது தேசிய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அரசாங்கத்தின் இந்த முடிவு குடிவரவு திணைக்களத்தால் குமார் குணரத்தினத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
சோஷலிஸத்திற்காக வர்க்கத்திற்கு ஒரு கட்சி!
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
31 Dec 2016
- Hits: 935
வருடம் முடிந்து விட்டது. புது வருடம் பிறந்திருக்கின்றது. புது வருடத்தை புதிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்குமாறு சிலர் சொல்கிறார்கள். ஆனால், இவ்வருடம் எமது வாழ்நிலை கடந்த வரவு செலவு அறிக்கையால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. நாம் எவ்வளவுதான் வணக்க வழிபாடுகளை செய்தாலும், நாள் நட்சத்திரங்களைப் பார்த்தாலும் எமது வாழ்நிலையைத் தீர்மானிப்பது எமது நாட்டின் மிகச்சிறு குழுவினரான அதிகாரபலம், பணபலம் படைத்த வர்க்கமாகும். அவர்கள் சொல்வதையும் செய்வதையும் கொண்டே எமதும் எமது பிள்ளைகளினதும் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது முதலாளித்துவ வர்க்கம் எம்மிடமிருந்து பறித்துக் கொள்பவற்றின் காரணமாகத்தான் எந்நாளும் ஏக்கப் பெருமூச்சு விட வேண்டியுள்ளது.
இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை, ஆகிய இரண்டிற்கும் சாவுமணி அடிக்கப்படவிருக்கின்றது. உழைக்கும் மக்களின் உரிமையான ஓய்வூதியம், 8 மணி நேர வேலைநாள், EPF-ETF எல்லாமே முடிந்துவிடும். எஞ்சியுள்ள அரச நிறுவனங்கள், இயற்கை வளங்கள் விற்கப்படுகின்றன. உச்சியிலேயே போடப் போகிறார்கள்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் 2வது தேசிய மாநாடு பெப்ரவரி 01
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
28 Jan 2017
- Hits: 830
எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகதாச விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் முன்னிலை சோசலிசக் கட்சியின் 2வது தேசிய மாநாடு இடம்பெற இருப்பதாக கட்சி அறிவித்துள்ளது. "ஏகாதிபத்திய நவ தாராளமய திட்டத்திற்கு எதிரான சோசலிசத்திற்காக உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு கட்சி" என்ற கருப்பொருளில் இந்த தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது.
எதிர்ப்பு காட்டும் உரிமையில் கை வைக்காதே!
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
13 Jan 2017
- Hits: 740
பிரதமரின் தலைமையில் ஜனவரி 7ம் திகதி அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவல பிரதேசத்தில் நடைபெற்ற "தெற்கு அபிவிருத்தி வலயம்" திறப்பு விழாவிற்கு சமமாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஜனநாயகத்தை விரும்பும் இந்நாட்டின் சகல மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் இசியேங் லியானும் முன்னின்று நடத்திய இந்த விழாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எதிராக நீதிமன்றம் 6ம் திகதி தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த விழா நடைபெறும் தருணத்தில் அப்பிரதேசத்திற்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர். அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உட்பட 26 பேரிடம் தனிப்பட்ட ரீதியில் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி அம்பாந்தோட்டை துறைமுக வளாகம், வான் பாலத்தை அண்டிய பிரதேசம், நிர்வாக இடங்களை அண்டிய பிரதேசங்கள் மற்றும் பெருந்தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியன 14 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.