மக்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள புதிய வரிச்சுமைக்கு எதிராக கொழும்பில் போராட்டம்
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
09 May 2016
- Hits: 747
ரணில் - மைத்திரி அரசால், பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய வரிச்சுமைக்கு (வற்) எதிராக முன்னிலை சோசலிசக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இன்று கொழும்பு புறக்க்கோட்டையில் நடந்த முதலாவது போராட்டப் படங்களை இங்கு காணலாம். மக்கள் ஏற்க்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி திணறிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு அரசால் ஒரு விடிவைக் காண முடியவில்லை. மேலும் 15% மேலதிக விலை அதிகரிப்பை வற் என்ற பெயரில் திணித்துள்ளனர். உழைக்கும் மக்களை ஒட்ட உறிஞ்சி நடுவீதியில் விடும் இந்த கொடுமைக்கு எதிராக திரண்டு போராட வருமாறு அறைகூவல் விடப்பட்டது.