Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இன்று வடக்கில் முன்னிலை சோசலிச கட்சி வேட்புமனு கையளிப்பு

இடதுசாரியத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் அரசியல் கிளர்ச்சியாக,  மக்களை சந்தித்து இடதுசாரிய அரசியல் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கும் நோக்கில் எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிலை சோசலிச கட்சி பங்கு பற்றுவது என முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவின் அடிப்படையில் பொதுத் தேர்தலுக்காக வேட்பாளர்களை நாடு முழுவதும் மாவட்ட ரீதியாக நேற்றும் இன்றும் பதிவு செய்து வருகின்றது.  இன்று யாழ் மாவட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சி (10.07.2015) தோழர் சந்திரகுமார் தலைமையில்  தனது வேட்பாளர்களை அழைத்து சென்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த போதான காட்சிகள் சில. அதே போல் இன்று வன்னி மாவட்டத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.