அரசியல் கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்து!
- Details
- Category: தோழமை அமைப்புகள்
-
06 Jan 2017
- Hits: 982
கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டடோர்கள் மற்றும் அரசியல் கொலைகளிற்கு உள்ளானோர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறும், அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி 05-01-2017 அன்று ஜனநாயகத்துக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியுள்ளனர். இதில் இடதுசாரிய கட்சிகளான முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனீனிச கட்சி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி, இலங்கை சோஷலிஸக் கட்சி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் இவர்களுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலார் பிரகீத் எகலியகொட அவர்களின் மனைவியும் கலந்து கொண்டார்.