Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

இலங்கை அரசின் பொலீஸ் குண்டர்களால் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு யாழ் பல்கலை மாணவர்  படுகொலைக்குள்ளானதை கண்டித்தும், நீதி கோரியும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஜனநாயகத்திற்கான ஆர்ப்பாட்டகாரர்கள் போராட்டத்தில் இன்று (24/10/2016) ஈடுபட்டிருந்தனர். இதில் இடதுசாரிய கட்சிகள, தொழிற்சங்கங்கள் வெகுஜன அமைப்புக்கள் பங்குபற்றியிருந்தன.

நாடு மீண்டும் அரச பயங்கரவாதத்திற்குள் திரும்புவதை கண்டித்தும், பொது மக்களின் ஜனநாயகம் - பாதுகாப்பை உறுதியடுத்துவதை வலியுறுத்தியும் இதில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்து கொண்டனர்.