Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தேசத்தை நேசித்தவனும், தேசம் நேசித்தவனுமே.....

எங்கள்

நேசமிகு தோழன்

எம் சி லோகநாதன்....

 

காலக்கண்ணாடி

காட்ட மறுத்த நிஜங்களை

பூதக் கண்ணாடியில் ........

 

மாயைத்

திரை கிழித்து .

மானிடம் வென்றிட வழி காட்டி.....

 

வறுமையின்

களை பிடுங்கி உழைப்போரின்

பக்கம் நின்று மார்க்சிசமே

திறவுகோல் என்று சொன்ன ......

 

ஒரு மகத்தான

தோழனை பறிகொடுத்து

தவித்து நிற்கின்றோம் .......

 

விடுதலையை

நேசித்து விதையாகி

கல்லறையில் தூங்கும்

தியாகிகளோடு

நீயும் இப்போது தூங்கு

உன் எண்ணங்களை நாங்கள்

சுமக்க ஆரம்பிக்கிறோம் தோழனே...

 

தோழமையுடன்

சந்துரு.