Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்!" - டென்மார்க் போராட்டம் (படங்கள்)

இன்று 12-12-2015 காலை 10 மணி முதல் டென்மார்க், கொல்ஸ்ரபரோவ் நகரில் சமவுரிமை இயக்கம் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை நடாத்தியிருந்தது. இப் போராட்டமானது "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!, சகல காணாமலாக்குதல்கள் கடத்தல்கள் குறித்த தகவல்களை மக்களிற்கு வெளிப்படுத்து!, அனைத்து இலங்கை பிரஜைகளின் பிரஜா உரிமையினை வழங்கு!, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்!, குமார் குணரத்தினத்தை உடன் விடுதலை செய்!"  ஆகிய கோசங்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டது.

Read more ...

“சகல கடத்தல்கள், காணாமலாக்கல்களை வெளிப்படுத்து” டென்மார்கில் சமவுரிமை இயக்கம் போராட்டத்திற்கு அழைப்பு

எதிர்வரும் சனி 12/12/2015 அன்று டென்மார்க்கிலுள்ள கொல்ஸ்ரபரோவ் நகரசபைக்கு அருகில் காலை 10 மணி முதல் சமவுரிமை இயக்கம் மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், பாராமுகங்களிற்கு எதிராக முன்னெடுக்க இருக்கின்றது.

“இப்போதாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்!”

“இப்போதாவது காணாமலாக்கல்களை கடத்தல்களை மக்களிற்கு வெளிப்படுத்து!”

“அடக்குமுறை காரணமாக புலம்பெயர்ந்தவர்களை நாட்டில் அரசியலில் ஈடுபட இடமளி!”

“தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?”

Read more ...

சர்வதேச மனித உரிமை தினமான நாளை கொழும்பில் சமவுரிமை இயக்கம் போராட்டத்திற்கு அழைப்பு

நாளை டிசம்பர் 10ம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கொழும்பில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், பாராமுகங்களை எதிர்த்து மாபெரும்  ஆர்பாட்டத்திற்கு சமவுரிமை இயக்கம் அழைப்பினை விடுத்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களான; கடத்தல், மற்றும் சரணடைந்து காணாமல் ஆக்கல், வன்னி யுத்தத்தில் மக்களை கொத்து கொத்தாக படுகொலை செய்தது முதல் பத்திரிகையாளர்கள், மனித உரிமையாளர்கள் கடத்தல், காணாமல் ஆக்கல் படுகொலைகள் என இன-மத-மொழி வேறுபாடுகள் இன்றி பல் வேறு மனித உரிமைகள் மீறப்பட்டன.

Read more ...

சமவுரிமை இயக்கத்தின் சர்வதேச மனித உரிமைகள் தின போராட்டம் (படங்கள்)

சர்வதேச மனித உரிமை நாளான இன்று 10.12.2015, சமவுரிமை இயக்கம் போராட்டமொன்றை கொழும்பில் நடாத்தியது.

கடத்தப்பட்டோர், காணமலாக்கக்பட்டோரை விடுவி!

அவர்கள் பற்றிய தகவல்களை இப்போதாவது வெளியிடு! .

போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் இடம்பெற்றது.

Read more ...

சமவுரிமை இயக்கத்தின் நோர்வே போராட்டம் (படங்கள்)

நேற்றைய தினம் 03.12.15 அன்று ”சம உாிமை இயக்கத்தின்” நோா்வே கிளையினரால்; இலங்கை கொடுஞ்சிறைகளில் பல வருடக்கணக்காக எந்த நீதி விசாரணைகளுமற்று சர்வதேச மனித உரிமைகளிற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி நோர்வே பாராளுமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட கண்டன போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் நோர்வே கிளை ஒழுங்கு செய்திருந்தது.

Read more ...