Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மீண்டும் ஒரு கறுப்பு ஜீலை வேண்டாம்!: சமவுரிமை இயக்கம் (படங்கள்)

இன்று காலை கொழும்பு, கோட்டை புகையிரத நியைத்திற்கு முன்பாக சமவுரிமை இயக்கத்தினால் "மீண்டும் ஒரு கறுப்பு ஜீலை வேண்டாம்!" என்னும் கருப்பொருளுடன், இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான மக்கள் விழிப்பு நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் இனவாதம் மதவாதத்திற்கு எதிராக தமது கண்டனங்களை அங்கு வைத்திருந்த பாரிய பதாகைகளில் தமது கையொப்பங்களை இட்டு பதிந்து சென்றனர். சமவுரிமை இயக்கத்தினால் "இனவாதத்திற்கு - மதவாதத்திற்கு "இல்லை" என்போம்!" துண்டுப்பிரசுமும் விநியோகிக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதத்திற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

Read more ...

இனவாதத்திற்கு - மதவாதத்திற்கு "இல்லை" என்போம்!

எமது நாடு இனவாத, மதவாத தீயில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம். 1983 ஜுலை மாதம் -இற்றைக்கு 31 வருடங்களுக்கு முன்னர், அன்றைய ஆட்சியாளர்களாலேயே நடத்தப்பட்ட கறுப்பு ஜுலையின் பின்னர் உக்கிரமடைந்த யுத்தத்தினால் துன்பப்பட்டோம். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் அங்கவீனர்களாக்கப்பட்டனர். அனாதைகளாகினர். எல்லாவற்றையும் விட எமது சமூக மனச்சாட்சி, பகுத்தறிவு, மனிதநேயம் அனைத்தும் இழக்கப்பட்டது. அந்த பாரிய அழிவின் பின்னர், யுத்தம் முடிந்து விட்டது என ஆறதலடையும் சமயத்தில் மீண்டும் இனவாத- மதவாத பொறியில் சிக்கவைக்க அழுத்கம, பேருவள பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் நாம் கண்டோம். இந்த பொறியை நிர்மாணித்தவர்கள் ஆட்சியாளர்களே மீண்டும் யுத்தத்திற்கு பாதை அமைக்கப்படுகிறது. அந்தப் பாதையில் செல்வது எந்தளவு அழிவைத்தரும் என்பதை அனுபவ வாயிலாக கண்டோம். நாங்கள் அந்த வழியில் மீண்டும் சென்று பொறியில் சிக்க வேண்டுமா?

Read more ...

முஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து டென்மார்க்கில் துண்டுப்பிரசுரம்...

இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மீது பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களாலும், அரசினாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனரீதியிலான வன்முறையினை கண்டித்து டென்மார்க் கொல்ஸ்ரபோ நகரிலும் அதனை அண்டிய நகர்களிலும் டென்மார்க் சம உரிமை அமைப்பினால் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Read more ...

வன்முறைகளுக்கு தீர்வுகாண சம உரிமை இயக்கத்தின் கலந்துரையாடல்!

22.06.2014 இன்று மருதானை சி.எஸ்.ஆர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நாட்டில் எழுச்சி பெற்றிருக்கும் இன வன்முறைக்கு பொருத்தமான தீர்வு ஒன்றை காணும் நோக்கில் சம உரிமை இயக்கத்தினால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலான புத்திஜீவிகள், பேராசிரியர்கள், சமூகபற்றாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read more ...

முஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சமவுரிமை இயக்கத்தின் லண்டன் போராட்ட படங்கள்

இலங்கையில், முஸ்லீம் சகோதரர்கள் மக்கள் மீது பௌத்த அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இனரீதியிலான வன்முறையினை கண்டித்து லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை நேற்றைய தினம் (20.06.2016) நடாத்தியது. குறுகிய அழைப்புக்காலம் எனினும் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக, அவர்களின் உரிமையை வலியுறுத்தி உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர்.

Read more ...