Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

மீண்டும் கறுப்பு யூலை வேண்டாம் என்று கூறி, தொடரும் கையெழுத்துப் போராட்டம்

நாடு தழுவி தொடரும் போராட்டம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக நடந்து வருகின்றது. இன-மத வாதத்தை யாரைச் சார்ந்து அரசு முன்னெடுக்கின்றதோ, அந்த மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சாரத்தை சமவுரிமை இயக்கம் குறிப்பாக்கி கூர்மையாக்கி வருகின்றது.

(பொலன்நறுவை)

குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இன-மத வாதத்துக்கு எதிரான பிரச்சாரம், நல்ல சமுதாய விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இளைஞர் சமுதாயத்தையும், குறிப்பாக 1983 கறுப்பு யூலைக்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கான, வாழ்வியல் கல்வியாக, இந்தப் போராட்டம் மாறி இருக்கின்றது.

(பொலன்நறுவை)

மத குரோதமற்ற நல்ல சமுதாயத்ததை நோக்கிப் பயணிக்க இந்தப் போராட்டம் பாதை அமைகின்றது என்றால் மிகையல்ல.

(பொலன்நறுவை)