Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இன ஜக்கியத்திற்க்காக போராட முன்வந்த தேரோவை தடுத்து நிறுத்தியுள்ள மகிந்த எடுபிடி!

சிங்கள, முஸ்லிம்,  தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கோரியும்; கிழக்கு மாகாணத்தில் சிங்கள,  தமிழ், முஸ்லிம் ஏழை மக்களுக்கு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதியின் தலையீட்டை வலியுறுத்தியும், மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் இன்று காலை முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்குகொண்டு வந்துள்ளார்!

அத்துடன் மட்டக்களப்பில் சிங்களவர்கள் வசித்த காணிகள் போலி ஆவணங்கள் கொண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றினை மீட்டுத்தரவும் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்திருந்தார்!!

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் விகாராதிபதியின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்ட பின்னர், தேரரின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதி மொழி வழங்கியதையடுத்து இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, (இன-மத-மொழி ஐக்கியத்தை பேணும்வகையில்) அரசுக்கெதிராக போராடும் ஓர் சமூக அக்கறையுள்ள புத்தபிக்குவிடம், அம் மக்களின் பிச்சினைகளை கேட்டறிந்துள்ளார் கருணா அம்மான் என்கின்ற மகிந்த அடிமை!

ஏகப்பெரும்பான்மையான பேரினவாத இனவெறி கொண்ட பௌத்த பிக்குகளுக்கு மத்தியில், இவரின் இனவாதமற்ற சிங்கள, தமிழ், மக்களின் ஐக்கியத்திற்கான போராட்ட உணர்வை மதிக்கவேண்டும். இப்பேர்ப்பட்டவர்களின் போராட்டடக் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.

இப்புத்த பிக்கு முன்னெடுத்திருக்கும் போராட்டம் மட்டக்களப்பில் சிங்களவர்கள் வசித்த காணிகள் போலி ஆவணங்கள் கொண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றினைமீட்டுத்தரவும் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனும் கோரிக்கை.

இத்தனைக்கும் மட்டக்களப்பு மக்களின் ஏகப்பிரதிநிதியாக, தன்னை இனங்காட்டும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு, இப்படியொரு பிரச்சினை இருப்பதாக தெரியுமோ தெரியாது! சரி இப்பிக்கு மூலமாவது இதை தெரிந்து கொண்டும், அதற்கு ஆதரவாக குரல் கொடுக்காமல், தன் எஐமானிடம் தீர்வு பெற்றுதருவதாக, அப்புத்த பிக்குவின் போராட்ட உணர்வை மழுங்கடித்துள்ளார்.

போராடும் மக்களையும், அவர்களின் வெகுஐனப் போராட்ட மார்க்கங்களையும் முறியடிப்பதற்கென்றே அரசு பலரை தோற்றுவித்தும்,. தன்னகத்துள்ளும் கொண்டுள்ளது.

இவர்கள் வடக்கின் வசந்தமாக, கிழக்கின் விடிவெள்ளிகளாக, முஸ்லிம் காங்கிரஸாக முழுத் தமழின மக்களுக்குள், மக்கள் விரோத அரச பரிபாலனம் செய்கின்றார்கள்.

யாதொரு பெரும்பொருளை அறிந்ததுமாகிற்று!

அகிலன்-16/02/2012