Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஐரோப்பா வரும் அகதிகளைத் தடுக்க முட்கம்பி வேலிகள்!

இலட்சக்கணக்கான அகதிகளும் - ஆயிரக்கணக்கான பிணங்களும் குவிய, அகதிகள் வரும் பாதைகளை குறிவைத்து பல கிலோமீற்றருக்கு முட்கம்பி வேலிகளை மேற்குநாடுகள் அமைக்கின்றது. மத்திய கிழக்கில் மரணத்தில் இருந்து தப்பியவர்கள் - ஐரோப்பாவில் அகதிப் பிணமாகி மிதக்கின்றனர்.

2ம் உலக யுத்தத்தின் பின் கம்யூனிசம் - முதலாளித்துவம் என்ற இரு வேறு வர்க்க உலகை பிரிக்கவும் - தடுக்கவும் என்று கூறி, 1960 களில் மேற்கு - கிழக்கு nஐர்மனியை பிரித்து மதில் கட்டப்பட்டது. அந்த மதிலை கோர்பச்சேவ்; காலத்தில் இடித்த போது, "ஐனநாயக" விரோத "கம்யூனிசம்" பற்றி முதலாளித்துவம் கதை கதையாக கூறியது. வேடிக்கை என்னவென்றால் குருசேவ் காலத்தில் மேற்கு nஐர்மனி நிதி கொடுக்க - கிழக்கு nஐர்மனி மதிலைக் கட்டியது என்பது வரலாற்றின் முரண் நகை. அன்று இந்த மதில் மூலம் கம்யூனிசம் மேற்கு நோக்கி நகர்வதை தடுக்கவும் - மறுபக்கத்தில் முதலாளித்துவம் கிழக்கு நோக்கி செல்வதை தடுக்கவும் - என்ற இரு முரண் அரசியல் கூறுகள் அரங்கேறின.

இந்த வரலாற்றுப் பின்னணியில் ஐரோப்பாவை நோக்கி மக்கள் வருவதைத் தடுக்க முட்கம்பி வேலிகளும் - போர்க்கால கண்காணிப்புகளும் முனனெடுக்கப்படும் சூழலில், ஐரோப்பாவை நோக்கி வரும் பாதையெங்கும் பிணக் குவியலாகி வருகின்றது.

இன்றைய அகதிகளின் நிலைமைக்கான காரணம் மேற்குநாடுகளே. இந்த வகையில் இந்த அகதிகளை மேற்குநாடுகள் ஏற்றேயாக வேண்டும். ஈராக் - ஆப்கான் ஆட்சிகளை அமெரிக்க தலைமையிலான மேற்குநாடுகள் ஆக்கிரமித்தது முதல் லிபிய ஆட்சியை கவிழ்த்து சிரிய ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததன் மூலம், இந்த நாடுகள் எங்கும் இஸ்லாமியத்தின் பெயரில் மத அராஜகங்கள் அரங்கேறி வருகின்றது.

இஸ்லாமியத்தின் பெயரில் இஸ்லாமியத்தின் வௌ;வேறு சமூகப் பிரிவுகளையும் - பிற மதங்களையும் ஒடுக்குவதும், கொல்வதும் நடந்தேறுகின்றது. பொது மக்களின் செல்வத்தை கொள்ளை அடிப்பதும் - பெண்களை பாலியல் அடிமையாகக் கொள்வதையும், இஸ்லாமியமாக கூறிக் கொள்ளும் கும்பல்களின் அதிகாரம் தழைத்தோங்கி வருகின்றது. யுத்த அடிமைகளை கொண்டதும் - அவர்களை வாங்கி விற்பதும் வரை அங்கு அரங்கேறுகின்றது.

இந்த வகையில் அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகளின் பொருளாதார - இராணுவநலன் சார்ந்த தலையீடுகள், இன்று மத்திய கிழக்கின் ஒரு பகுதியை, மக்களை சூறையாடி அவர்களை அழித்து வருகின்றது.

மத்திய கிழக்கு எங்கும் மக்கள் வாழ்விழந்து அகதிகளாகி வருகின்றனர். மேற்கு நோக்கிய புலம் பெயர்வு என்பது, வரலாறு காணாத அளவுக்கு முடிவின்றி தொடருகின்றது.

ஆளும் வர்க்கங்களாலும் - ஆட்சியாளர்களாலும் (கட்சிகளாலும்) இஸ்லாமிய வெறுப்பூட்டப்பட்ட ஐரோப்பிய (இன - மத - நிறவெறி) சமூகம் நோக்கி அகதிகளின் வருகையானது, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலும் - மக்களுக்கு இடையிலும் பிளவுகளையும் மோதல்களையும் உருவாக்கி வருகின்றது.

மறுபக்கத்தில் அகதிகள் வருகின்ற பாதைகளுக்கு முட்கம்பி வேலிகள் போட்டு கட்டுப்படுத்துவதை காட்சிப்படுத்துவதும் - கண்காணிப்புகளை அதிகரித்து ஒடுக்குவதும், கடல் - தரை எங்கும் அகதிகளின் பிணங்களால் குவிவதைத் தடுக்க முடியவில்லை.

மனித விரோத முதலாளித்துவ - ஏகாதிபத்திய அரசுகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்படும் சூழலில், அகதிப் பிணங்கள் இதன் பின்னான உண்மைகளையும் - இதன் பின்னணியையும் ஆராயுமாறு மனிதகுலத்தைக் கோருகின்றது.