Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 26

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 26

சமூகத்தின் உரிமையை மறுத்த தனிமனித உரிமை  மீதான பாட்டாளி வாக்க சர்வாதிகாரம்

லெனினை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த டிராட்ஸ்கி, லெனினின் மரணத்தின் பின் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்ததுடன் சதியிலும் ஈடுபட்டான். லெனினியத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராகவே தொடச்சியாக செயல்பட்டான். லெனின் ஒரு நாட்டில் நடக்கும் புரட்சியையும், அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்கத்தின் பணியையும் தெளிவுபடுத்தியதுடன், டிராட்ஸ்கியம் போன்ற கோட்பாடுகளை முன் கூட்டியே அம்பலப்படுத்தினார்.

ஒரு நாட்டில் வெற்றியடைகிற புரட்சி, மற்ற எல்லா நாடுகளிலும் புரட்சி வளரவும், ஆதரவு பெருகவும், விழிப்பு எற்படவும் முடிந்த அளவுக்கு தன் நாட்டில் அது சாத்தியமானவற்றையெல்லாம் செய்ய வேண்டும்” என்றார். புரட்சி வெற்றி பெற்ற (சொந்த) நாட்டில் புரட்சி எப்படி முன்னேறுகின்றது என்பதைப் பொறுத்தே, மற்றயை நாடுகளின் புரட்சி மேலும் ஆழமாக வளர்ச்சியுறுகின்றது. அத்துடன் தர்மீக ரீதியிலும் பலம் பெறுகின்றது. ஒருநாட்டில் நடந்த புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகளை எதிர்த்து, ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி வர்க்கம் போராடும் அதே தளத்தில் தான், புரட்சி நடை பெற்ற நாடு அந்த பாட்டாளிக்காக குரல் கொடுக்கின்றது. இந்த மையமான விடையம் மூன்றாம் உலக நாடுகளில் கூட பொதுவான சர்வதேசிய வரையறையாக உள்ளது. சர்வதேசியம் என்பது வெற்றி பெற்ற நாட்டின் புரட்சியை மேலும் தொடர்வதும், அதற்கு ஆதாரவாக சர்வதேச பாட்டாளி வர்க்கம் போராடுவதும் அடிப்படையானது. அதே போல் வெற்றி பெற்ற நாடு உலகளாவிய சர்வதேச புரட்சி என்ற ஒரு அடிப்படையான உரிமையில் நின்று, உலக பாட்டாளி வர்க்கம் தத்தம் சொந்த நாடுகளில் புரட்சியை நடத்த தர்மிக உதவிகளை வழங்குவதே சர்வதேசியம். இதில் ஒன்றை மட்டும் செய்யக் கோருவது மார்க்சியமல்ல. சொந்த நாட்டில் புரட்சியை தொடர்வதை மறுப்பதும், மற்றயை நாட்டு பாட்டாளி வர்க்க புரட்சிக்கு உதவக் கோருவது மார்க்சியமல்ல. இது முதலாளித்துவ மீட்சியாகும்.

புரட்சி என்பது ஆட்சியைக் கைப்பற்றிய பாட்டாளி வர்க்கத்துக்கும், கைப்பாற்றாத பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான இயங்கியல் ரீதியான பரஸ்பர விதிகளால் ஆனது. இதை டிராட்ஸ்கியம் எற்றுக் கொண்டதில்லை. ஏன் மார்க்ஸ்சின் போதனைகளை நிராகரிப்பதே டிராட்ஸ்கியமாகியது. இதற்கு மாறக ஸ்டாலின் மார்க்சிய போதனைகளை உயர்ந்த பட்சத்திற்கு வளர்த்தெடுத்தார். ஸ்டாலின் இது பற்றிய தனது சொந்த நடைமுறையில் நம் கட்சிக்கு உலகத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக நின்று போராட வேண்டிய பொறுப்பு எற்பட்டிருக்கின்றது அத்துடன் மிகவும் சிக்கலான தேசிய மற்றும் உலக நிலைமைகளின் இடையில் நம் கட்சி வேலை செய்ய வேண்டியிருக்கின்றது” என்றார்.  அத்துடன் சொந்த நாட்டில் முதலாவது, வீழ்த்தப்பட்ட சுரண்டும் வர்க்கத்தினுடைய எதிர்ப்பை நசுக்குவதற்கும் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் சாதனைகளை உறுதிப்படுத்துவதற்கும் ஆகும். இரண்டாவது, தொழிலாளி வர்க்கப் புரட்சியை பூர்த்திக் கட்டம் வரையில் கொண்டு போவதற்கும் சோசலிசத்தின் பூரண வெற்றியை சாதிக்கும் வரை புரட்சியை கொண்டு செல்வதுமாகும்” என்றார். சர்வதேசியம் என்பது பாட்டாளி வர்க்கம் எந்த நிலையில் தனித் தனியான நாட்டில் இருக்கின்றதோ, அந்த நிலையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதை குறிக்கிறது. இதை பரஸ்பரம் ஆதரித்து முன்னேற்றுவ நடத்துவதை குறிக்கிறது.  

புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தை பற்றி மார்க்ஸ் உள்நாட்டு யுத்தங்களும் சர்வதேச சச்சரவுகளும் உண்டாகும். அவை பதினைந்து இருபது, ஐம்பது வருடங்கள் என்று அநேக வருடங்களுக்கு நீடிக்கும். அவற்றில் நீங்கள் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டியிருக்கும்,  யதார்த்த நிலைமைகளை மாற்றுவதற்கு மட்டுமல்ல,  உங்களையே நீங்கள் மாற்றிக் கொள்வதற்கும் கூட,  அரசியல் அதிகாரத்தை எந்தி அரசாள்வதற்கு உங்களை நீங்கள் தகுதியுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதற்கும் கூட, அவ்விதம் நீங்கள் போராட வேண்டியிருக்கும்”  என்றார். மிகவும் தீர்க்க தரிசனமாகவே மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்தை எச்சரித்திருக்கிறார். உள்நாட்டில் யுத்தங்கள், சதிகள், சச்சரவுகள், முதலாளித்துவ மீட்சி நீடிக்கும் என்பதையும், அவை பல பத்து வருடங்கள் நீடிக்கும் என்பதையும் இவ்வளவு தீர்க்க தரிசனமாக மார்க்ஸ் முன் கூட்டியே எச்சரித்துவிடுகிறார். இந்த தீர்க்கதரிசனமிக்க எதார்த்த அரசியல் உள்ளடகத்தை புறந்தள்ளிய யாரும், மாhக்சியவாதியாக சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவர்கள்;. சச்சரவுகளையும், சதிகாரர்களையும், யுத்தங்களையும் தொடக்க முனைந்த டிராட்ஸ்கியம் பேசிய முதல் முதலாளித்துவ மீட்சியாளர்களே; மார்க்ஸ்க்கு எதிராக தங்களை மார்க்சியவாதிகளாக கூறுக் கொள்வது நிகழ்ந்தது. இவர்கள் அனைவரும் புரட்சிக்கு பிந்திய வர்க்கப் போராட்டத்தை எற்றுக் கொள்வதில்லை. முதலாளித்துவ மீட்சி என்பதையும் எற்றுக் கொள்வதில்லை.

டிராட்ஸ்கியம் நிரந்தரப்புரட்சி என்று கூறி வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளையே நிராகரிக்கின்றது. சமூகத்தின் எற்றத் தாழ்வான சமூக நிலையை மறுக்கின்றது. ஆட்சியை தொழிலாளி வர்க்கம் மட்டுமே கைப்பற்றும் என்று கூறி, தூய வரட்டுவாதத்தை பேசுகின்றது.  ஒரு நாட்டில் பிரதான எதிரிக்கு எதிரான தொழிலாளி வர்க்கம் அல்லாத வர்க்கப் பிரிவுகளை நிரந்தரப்புரட்சி எற்றுக் கொள்வதில்லை. குறிப்பாக விவாசய வர்க்கத்தை புரட்சியின் எதிரியாக நிரந்தரப்புரட்சியை காட்டி நிராகரிப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை மென்ஸ்சுவிக்குகள் பாதையில் முன்தள்ளப் பயன்பட்டதே ட்ராட்ஸ்கியம். லெனினின் வர்க்கப் போராட்டத்தின் ஏற்றத் தாழ்வான இயங்கியலையும், எற்றத் தாழ்வான சமுதாய இருப்பையும் கேலி செய்த டிராட்ஸ்கி, சமுதாயத்துக்கு புறம்பாக வரட்டுத்தனமாக நிராந்தப் புரட்சி பற்றி புலம்பிய போது, லெனின் இதை “ஒரிஜினல்” என்றும் “அபூர்வமான” என்றும் கிண்டல் செய்து நிராகரித்தார். அந்தளவுக்கு ட்ராட்ஸ்கியம் வர்க்கப் போராட்டத்துக்கு எதிராக இருந்தது. போல்ஸ்விக்குகளின் சரியான மார்க்சிய நிலைக்கு எதிராக இருந்தது. மார்க்சியத்துக்கு எதிராக டிராட்ஸ்கி மார்க்ஸ்சையே திரித்து காட்டிய நிரந்தரப் புரட்சி கோட்பாடு பற்றி லெனின் கூறும் போது இந்த அபூர்வமான தத்துவம் பத்து வருடங்களில் ஒரு பலனையும் உண்டு பண்ணவில்லையே! இதற்கு காரணம் என்ன என்று அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்” என்று அன்று கூறினார். இதையே இன்றும் சிந்திக்க மறுக்கும் டிராட்ஸ்கியவாதிகள், பழைய நிரந்தரப் புரட்சி என்ற வரட்டுக் கோட்பாட்டைக் காட்டியே ஸ்டாலினுக்கு எதிராக தூற்றி முன்தள்ளுகின்றனர். 1917ம் ஆண்டு போலஷ்விக்குகளுடன் இணைந்த டிராட்ஸ்கி பழையவற்றையும், நடுநிலைவாத கதம்பங்களையும் கைவிட்டதாக பறைசாற்றி தன்னை மூடிமறைத்துக் கொண்டான். பின்னால் நிரந்தரப் புரட்சி பற்றி இன்று வரை புலம்புவது தொடருகின்றது. லெனின் நிரந்தரப்புரட்சி பற்றி மேலும் குறிப்பிடும் போது புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் தொழிலாளி வர்க்க அரசியல் அதிகாரத்தைக் கைப்பற வேண்டும் என்றும் போல்ஸ்விக்குகள் வெளியிட்ட முழகத்தை அவர்களிடமிருந்து அந்த தத்துவம் கடன் வாங்கி இருக்கிறது. மறுபக்கத்தில், விவசாயிகள், புரட்சியில் வகிக்கும் பாத்திரத்தை “நிராகரிக்கும்” மென்ஸ்விக்குகளின் கருத்தை அந்த தத்துவம் மென்ஸ்விக்களிடமிருந்து கடன் வாங்கியிருகிறது” என்றார். நிரந்தரப் புரட்சியின் அடிப்படைக் கோட்பாட்டையும், அதன் மார்க்சிய விரோத நிலையையும் அம்பலப்படுத்தினார் லெனின். ஆனால் டிராட்ஸ்கியம் தாமே லெனினியவாதிகள் என்று கூறிக் கொண்டு நிராந்தரப் புரட்சியை முன்தள்ளுகின்றனர். டிராட்ஸ்கியின் நிராந்தர புரட்சியை நிராகரித்த ஸ்டாலினை, லெனினியத்துக்கு எதிரானவராக முத்திரை குத்தி தூற்றுகின்றனர். டிராட்ஸ்கியம் போல்ஸ்விக்கும், மென்ஸ்விக்கும்  இடையில் ஒரு பாதை தேடி, மென்ஸ்சுவிக்காக புரட்சிக்கு எதிராக முன்வைத்த நிரந்தப்புரட்சித் தத்துவத்தையே இன்று வரை டிராட்ஸ்கியம் தலையில் வைத்து கொண்டாடுகின்றது. மார்க்சியத்துக்கு திருத்தத்தை வைக்கின்றது. போல்ஸ்விசத்தை கைவிடக் கோருகின்றது. அதை ஸ்டாலினிசம் என்று கூறி லெனினிச அடிப்படைகளையே கழுவேற்றுவதில் முனைப்பாக செயல்படுகின்றது. மார்க்ஸ் நிரந்தரப் புரட்சி பற்றி கூறியதை திரித்து புரட்டி முற்றாகவே எதிர்நிலையில் திரிபுவாதமாகிய நிலையில், டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவம் காணப்படுகிறது.

1850 இல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் லீக்கில் பேசிய போது புரட்சியின் நிரந்தர தன்மை பற்றி மேலே குறிப்பிட்ட கேள்விகளில் கூடுமானவரை எல்லாவற்றையும் பெற்றவுடன் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் புரட்சியை முடித்துவிட ஜனநாயக மனப்பான்மையுள்ள மத்தியதர வர்க்கம் விரும்பும். ஆனால் நம் நலன்களும், கடமையும் அந்தப் புரட்சியை நிரந்தரமானதாக ஆக்குவதில் தான் அடங்கியுள்ளது. உடமை வர்க்கங்கள் யாவும் ஆதிக்கப்பீடத்தில் இருந்து வீழ்த்தப்படும் வரையில், தொழிலாளர் வர்க்கம் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில் ஒரு நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகில் முக்கியமான நாடுகள் அனைத்திலும் தொழிலாளர்களுக்கிடையில் போட்டி இல்லாதவாறு செய்து, பிரதான பொருளுற்பத்தி சக்திகள் யாவும் தொழிலாளிகளின் கையில் திரண்டு சேரும் நிலை உண்டாகும் அளவுக்கு தொழிலாளர்களின் கூட்டுறவு முன்னேறும் வரையில் புரட்சி நீடித்து நடத்தப்பட வேண்டும்” என்றார் மார்க்ஸ். புரட்சிக்கு பிந்திய அமைப்பில் தொடரும் வர்க்கப் போராட்டத்தை சுட்டிக் காட்டவே, புரட்சியின் நிரந்தர தன்மை பற்றி மார்க்சிய அடிப்படையை முன்வைக்கிறார். கம்யூனிசமே அதாவது நிரந்தரமான வெற்றி வர்க்கங்கள் அற்ற சமுதாய உருவாக்கும் நீடித்த வர்க்கப் போராட்டத்தின் முடிவில் தான் அடங்கியுள்ளது என்று கூறியிருக்கிறார் மார்க்ஸ். ஆனால் டிராட்ஸ்கியம் நீடித்த வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து நிரந்தரப் புரட்சியை வரட்டுத்தனமாக திரித்து வைக்கிறது. புரட்சியின் நீடித்த வர்க்கப் போராட்டம், ஆரம்பம் முதலே சமூகத்தில் முரண்பட்ட வர்க்கங்களுடன் இனைந்துள்ள புரட்சியின் அடிப்படை நலன்களுடன் தொடர்புடையது. தொழிலாளி வர்க்கம் மட்டும் தனித்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுவிடுவதில்லை. அப்படி பெற்றாலும் இடைநிலை வர்க்கங்களின் ஆதாரவுடன் தான் புரட்சி வெற்றி பெறுகின்றது. இதை கூர்மையாகவும் நுட்பமாகவும் சொன்னால் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தால் முழுமையாக ஆயுத பாணியாக்கப்பட்ட, ஒட்டு மொத்த மக்கள் சார்ந்து புரட்சி நடப்பது இல்லை. மாறாக சித்தாந்த துறையில், பொருளாதார துறையில் பாட்டாளி வர்க்கமல்லாத சிந்தாந்த ஆதிக்கம் கொண்ட சமுதாயத்தில் தான், தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை பெறுகின்றது. எனவே இது நீடித்த வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை உள்ளடக்கியதே ஒழிய, நிரந்தரமான புரட்சியை உருவாக்கிவிடுவதில்லை. நீடித்த புரட்சியை மறுத்து நிரந்தரபுரட்சி பற்றி கூறும் அந்த உள்ளடகத்தில் தான் முதலாளித்துவமீட்சி வித்திடப்படுகிறது. நிரந்தரம் என்பது நீடித்த புரட்சியின் ஒரு தொடர் விளைவாகவே இருக்கும். இல்லாத கற்பனையில் வரட்டுத்தனமான கோட்பாடுகளிலும், அராஜாகத்தின் கடை கோடியிலும் பிறந்ததே நிரந்தரப்புரட்சி பற்றிய டிராட்ஸ்கிய கோட்பாடு. இது மார்க்சின் அடிப்படையான மார்க்சிய உள்ளடங்களையும், சமுதாய மற்றத்தின் ஏற்றத் தாழ்வான அலை அலையான இயங்கியல் கூறுகளையும் கூட மறுக்கின்றது. இது பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கு, பாட்டாளி வர்க்க புரட்சிக்கு எதிரான கோட்பாடு. ஸ்டாலினுக்கு எதிராக டிராட்ஸ்கியம் முன் தள்ளுவது இதைத்தான். இதற்காகவே ஸ்டாலின் பலவிதத்தில் தூற்றுப்படுகின்றார்.

புரட்சியின் நிரந்தர தன்மையை பெறுவதற்கு முன் தொழிலாளர்கள், மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினை உள்ளடக்கிய தொழிலாளர் வர்க்க தலைமையில் கூட்டு அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே புரட்சியை தொடர்ந்து நடத்த முடியும். ஆட்சி அதிகாரத்தை தொழிலாளி வர்க்கம் கைப்பற்றிய பின் நீடித்த புரட்சியின் ஊடாகவே, படிப்படியாக தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை நிரந்தரமாக்க வேண்டும். இது தனித்த தொழிலாளர்கள் அல்லாத மற்றைய ஒடுக்கப்பட்ட பிரிவுகளை உள்ளடக்கிய ஆட்சியில் நடக்கும், உள்ளுறையான புரட்சியின் ஊடாக தொழிலாளர் வர்க்க ஆட்சியை நிறுவுவதாகும். இதனால் தான் இது கம்யூனிசம் அல்ல சோசலிச சமூகமாக இருக்கின்றது. டிராட்ஸ்கி இதைத் திரித்து தொழிலாளர் வர்க்க ஆட்சியை கைப்பற்றும் அந்தக் கணமே நிரந்தரப் புரட்சியை முன்தள்ளியதன் மூலம், புரட்சிகர கூறுகளையே சிதைத்து முதலாளித்துவ மீட்சிக்கான உள்ளடக்கத்தை முன் தள்ளகின்றார். அதாவது தொழிலாளி வர்க்கத்துடன் புரட்சியில் பங்குபற்றும் பிரிவுகளை எதிர்நிலைக்கு தள்ளி புரட்சியை பின் தள்ளுவது அல்லது புரட்சியை கைப்பற்றிய பின் நிரந்தப் புரட்சி என்பதன் மூலம் நீடித்த வர்க்கப் போராட்டத்தை மறுத்து முதலாளித்துவ மீட்சியை கோட்பாட்டு ரீதியாகவே உறுதி செய்வதே நிரந்தர புரட்சியாகும். சோவியத்தில் தொழிலாளி வாக்கத்தின் தலைமையில், தொழிலாளர் விவசாயிகளின் கூட்டான புரட்;சிகரமான பங்களிப்பை நிராகரித்து, விவசாயிகளை எதிரி வர்க்க நிலைக்கு தள்ளி முன்வைத்த கோட்பாடே நிரந்தரப் புரட்சியாகும். நிரந்தரப் புரட்சி சோசலிச கட்டமின்றி (மூன்றாம் உலக நாடுகளில் புதிய ஜனநாயக புரட்சி இன்றி) கம்யூனிச சமூகத்தை நேரடியாக அமைக்க கோரும் அராஜாகவாத கோட்பாட்டின் கடைக் கோடியில் நின்று முன்வைப்பதே. இன்றும் இதே டிராட்ஸ்கிய நான்காம் அகிலக் கும்பல் நிரந்தரப் புரட்சி என்ற மார்க்ஸின் சரியான நிலையைத் திரித்து, தொழிலாளர் வர்க்கத்துடன் கூட்டுச் சேரும் விவசாய வர்க்கத்தில் போர்குணாம்சத்துடன் கூடிய புரட்சிகரப் பாத்திரத்தை மறுதலிக்கின்றனர்.

டிராட்ஸ்கி திரித்துக் கூறிய நிரந்தர புரட்சியையும் இது போன்ற அனைத்தையும் நிராகரித்த லெனின் “சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர் தந்திரங்கள்” என்ற நூலில் நிகழ்ச்சிகள் எல்லாம் நாம் கூறியபடியே நிகழ்ந்திருக்கின்றன. புரட்சி நடந்தேறியிருக்கும் போக்கு நாம் பகுத்தாராய்ந்து முற்றிலும் சரி என்று ஊர்ஜிதம் செய்திருக்கின்றது. முதலாவதாக மன்னர் ஆட்சியையும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தையும், மத்திய கால ஆட்சி முறையையும் எதிர்ப்பதற்கு விவசாய மக்கள் “அனைவரையும்” ணைத்துக் கொண்டு புரட்சி முன்செல்லும். (அந்த அளவுக்கு, புரட்சி முதலாளியத் தன்மை வாய்ந்ததாக, முதலாளிய வர்க்க ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது) அதன் பிறகு சீமைப் பணக்கார விவசாயிகள், குலாக்குகள், லாப கொள்ளைக் காரர்கள், முதலியர்களை உள்ளிட்டு முதலாளியத்தை எதிர்ப்பதற்காக ஏழை விவசாயிகள், அரைத் தொழிலாளியாக மாறியிருக்கும் ஏழை விவசாயிகள், எல்லா சுரண்டப்பட்ட மக்கள் அனைவரையும் அனைத்துக் கொண்டு புரட்சி முன் செல்லும். இந்தளவுக்கு புரட்சியானது சோசலிசத் தன்மை வாய்ந்ததாகிறது. முந்தியதற்கும் பிந்தியதற்கும் இடையே ஒரு பெரிய மதில் சுவரை எழுப்பி பிரிக்க முயற்சிப்பது இரண்டு புரட்சிகளுக்குமிடையே ஒரு இடைக்காலம் தேவைப்படுவதும், தேவைப்படாததும் தொழிலாளர் வர்க்கம் இரண்டாவது கட்டத்துக்குப் பாய்வதற்கு எந்தளவுக்கு ஆயத்தமாகிறது என்பதையும், ஏழை விவசாயிகளுடன் எந்தளவுக்கு ஒற்றுழையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் மட்டுமே பொறுத்திருக்கும் என்பதைப் பாராமல், வேறெந்தக் காரணத்துக்காகவும் முதலாவது, இரண்டாவது கட்டங்களுக்கிடையிலே ஒரு இடைக்காலத்தைக் காண முயற்சிப்பது மார்க்ஸியத்தை கோணற்படுத்தித் திரித்துக் கூறுவதாகும், கேவலப்படுத்துவதாகும், மார்க்ஸியத்துக்குப் பதிலாக முதலாளிய மதவாதத்தை நிலைநாட்டுவதாகும்” என லெனின் நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையையே அம்பலப்படுத்தினார். ஆனால் இன்று வரை டிராட்ஸ்கிய வாதிகள் ஸ்டாலினைத் தூற்றியே மார்க்சியத்துக்கு எதிராக தம்மை நிலை நாட்டுகின்றனர்.

தமது சொந்த கோட்பாடுகளை பின்பக்க வழியாக திணிக்க ஸ்டாலின் தூற்றப்படுவது, சோசலிச சமுதாயத்தில் நடந்த, நடத்தப்பட வேண்டிய வர்க்கப் போராட்டத்தை மறுத்தே. மார்க்ஸ்; சோசலிச சமுதாயத்தில் துன்பமான கடுமையான துயர் நிறைந்த வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் அனுபவிக்க வேண்டிவரும் என்கிறர். ஆனால் இதைத் தூற்றுவது முதலாளித்துவ அரசியலாக மாறிவிடுகின்றது. பாட்டாளி வர்க்கமும் வர்க்கப் போராட்டத்தின் உள்ளடகத்துடன் மாறிச் செல்லவும், எம்மை நாம் மாற்றிக் கொள்ளவும், எதார்த்தையும் எதார்த்த வர்க்கப் போராட்டத்தை புரிந்து கொள்வதும், பாட்டாளி வர்க்க அடிப்படையை பாதுகாத்து தொடர்ந்து வர்க்கங்களை ஒழிக்க போராடடுவதன் அவசியத்தை மார்க்சியம் எமக்கு போதிக்கின்றது. இதை மார்க்ஸ் தீர்க்க தரிசனமிக்க வகையில் கூறிச் சென்றார்.

புதியஜனநாயகம், சோசலிசம் என்பது கம்யூனிசம் அல்ல. கம்யூனிசத்துக்கு முந்திய சமூக கட்டமைப்புகளாகும். புதியஜனநாயகம் என்பது சோசலிச சமூக கட்டமைப்புக்கு முந்திய ஒரு சமூக கட்டமைப்பாகும்;. அதாவது ஜனநாயக புரட்சி நடை பெறாத நாடுகளின் கட்டமைப்பாகும்;. ஒரு புரட்சிகர கம்யூனிச சமூகத்தை படைக்கும் ஒரு பாய்ச்சலை, அதாவது இடைக்கட்டமின்றி அடைந்து விட முடியாது. இடைக் கட்டம் என்பது அடிப்படையில் பழைய சமூகத்தின் பல்வேறு உள்ளடக்க கூறுகளை உள்ளடக்கிய வகையில் புரட்சி மூலம் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்துக்கு வருகின்றது. இந்த அரச அதிகாரமே பழைய முதலாளித்துவ வகைப்பட்ட வடிவில் வர்க்க ஆட்சியாகவே உள்ளது. புதிய ஜனநாயகம், சோசலிசம் என்பன உண்மையில் தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உள்ளடகத்தை மட்டும் குறித்து மார்க்சியம் வரையறை செய்கின்றது. இதை மறுப்பது திரிபு வாதமாகவும், முதலாளித்துவ மீட்பாகவும் உள்ளது. ஒரு புரட்சி இந்த இடைகால கட்டமின்றி கம்யூனிசம் நோக்கி செல்ல முடியம் என்ற டிராட்ஸ்கியத்தின் நிரந்த புரட்சி சரி, அனாஸ்சிட்டுகளின் அராஜாகவாதம் சரி, எதார்த்த நிலைமைக்கு புறம்பான முதலாளித்துவ மீட்சியாக உருவாகின்றது. ஒரு புரட்சியின் வெற்றி புரட்சிக்கு தயாரான மக்களின் தயார் நிலையுடன் நேரடியாக தொடர்புடையது. இந்த நிலைமை எதிரி வர்க்கத்தை தனிமைப்படுத்தி அழிக்கும் ஒரு நீடித்த இடைவிடாத புரட்சியின் முடிவில் தான் வெற்றியளிக்கின்றது. புரட்சி என்பது ஒரு தொடரான நிகழ்ச்சி நிரலைக் கொண்டது. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வந்தவுடன் இது மடிந்துவிடுவதில்லை. மாறக கடுமையானதும் சிக்கல் வாய்ந்ததுமான ஒரு வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் எதிர்கொள்கின்றது. எதிரி கட்சியின் உள் தனக்கான பிரதிநித்துவத்தை கண்டறிகின்றது. சமூக அமைப்பில் இருந்து உருவாகும் கட்சி, உயர்ந்த பட்ச வேலைத் திட்டத்தை நோக்கி நகரும் போது குறைந்த பட்ச வேலை திட்டத்துடன் நிற்பவர்களுக்கிடையில் முரண்பாடு உருவாகின்றது. இது ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் இருந்து உருவான கட்சியாக இருப்பதால், கட்சியில் முரண்பட்ட பிரிவு உருவாகின்றது. முரண்பாடு என்பது புரட்சியை மேலும் ஆழமாக்கி முன்னேறுவதா அல்லது குறைந்த பட்சத் திட்டத்துடன் நிறுத்திக் கொள்வதா என்பதே முரண்பாட்டின் அடிப்படை உள்ளடக்கமாக நீடிக்கும். இது முதலாளித்துவ மீட்சிக்கான புதிய பாதையாக உருவாகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகள் இந்த முரண்பாட்டில் புரட்சியை முன்னேற்றுவதற்கு எதிரான பிரிவுடன் தன்னை இணைத்துக் கொள்கின்றது.

இந்த பிணைப்பு பல்வேறு வழிகளில் கோட்பாட்டு ரீதியாக வெடிக்கின்றது. டிராட்ஸ்கி தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதே, சர்வதேச புரட்சிக்கு எதிரானது என்றான். இதை அவன் “தனிநாட்டு சோசலிசம்” என முத்திரை குத்தினான்;. தனது அதிகாரம், பலம் அனைத்தையும் கட்சியின் உள் இருந்தே பிரயோகித்தான். புரட்சியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும் சதிகளை தனது அரசியல் பாதையாக்கினான். இது சீனா, சோவியத் மற்றும் யூகோஸ்லாவியா எங்கும் இதுவே சோசாலிச அமைப்பின் அடிப்படையான முரண்பாடாக இருந்தன. புரட்சியை மேலும் தொடர்வதா அல்லது இத்துடன் நிறுத்துவதா என்பதே தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தின் திசையையும், மார்க்சியத்தின் இயங்கியலின் சரியான போக்கை முன்னெடுப்பதில் எற்பட்ட அடிப்படையான முரண்பாடாக இருந்தாது. அதாவது கம்யூனிச சமூகத்தைத் நோக்கி முன்னேற தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதா அல்லது முதலாளித்துவ மீட்சியை நடத்த வர்க்கப் போராட்டத்தை நிறுத்துவதா என்பதே கடந்த காலத்தில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தூக்கி எறியப்பட்ட நாடுகள் அனைத்திலும் மையமான விடையமாகி, வர்க்கப் போராட்டம் கைவிடப்பட்டு முதலாளித்துவ மீட்சி நடத்தப்பட்டது. இதை அரசியல் ரீதியாக மிகவும் துல்லியமாக முதலாளித்துவ மீட்சிக்கான எல்லா நடத்தைகளிலும் இனம் காணமுடியும். இது போன்று பாட்டாளி வர்க்கம் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த நீடித்த போது, இதற்கு எதிராக இருந்தவர்களின் அரசியலிலும் நீக்கல் இன்றி காணமுடியும்.

ஆனால் கம்யூனிசத்தையும், மார்க்சியத்தையும், பாட்டாளி வர்க்க தலைவர்களையும் தூற்றும் எவரும் இந்த உள்ளடகத்தினுள் விவாதிப்பதில்லை என்பதை, உழைக்கும் மக்களின் நலனுக்காக போராடும் யாரும் சரியாகவும் துல்லியமாகவும் இனம்காணமுடியும். தனிமனித உரிமையை முதன்மைப்படுத்தி சமூக உரிமையை சிறுமைப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையில் நின்று, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக பட்டியல் இட்டு தூற்றுவது நிகழ்கின்றது. உழைக்கும் மக்களின் உழைப்பை உறுஞ்சும், உறுஞ்ச விரும்பும் இலக்கியம் முதல் அந்த உரிமையை ஒடுக்குவதை மனித உரிமை மீறல் என்பது முதலாளித்துவ அகாராதி. பாட்டாளி வர்க்கம் இதை அங்கீகரிப்பதில்லை. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், பாலின் பெயரால், நிறத்தின் பெயரால், சுரண்டலின் பெயரால் ஒடுக்க நினைக்கும் எந்த இலக்கியமாக இருந்தாலும், நடைமுறை செயலாக இருந்தாலும் அவைகளை பாட்டாளி வர்க்கம் ஈவிரக்கமின்றி ஒடுக்கும். இது வன்முறை ரீதியாக கையாளும் போது கடுமையான தண்டனைக்குள்ளாகும். இங்கு மனிதபிமானம், மனித உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. மூலதனத்தின் எந்த சர்வதேச நீதிமன்றமும் இதை விசாரித்தாலும், பாட்டாளி வர்க்கம் இதற்கு தலைவணங்கப் போவதுதில்லை. தனிமனித உரிமை என்பது சமூகத்தின் உரிமையை பறிக்குமாயின், அது மனித விரோதக் கிரிமினல் குற்றமாகும். இந்த மனித சமுதாயத்தில் சமூக உரிமையை மறுக்கும், இந்த சமூக விரோதிகளுக்கு இந்த சமுதாயத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட வேண்டும். இதை யாரும் எதிர்த்து நிற்கின்றார்கள் எனின், சமூக உரிமைகளை கொச்சைப்படுத்தி, அந்த சமூகத்தின் வாழ்வை நாசமாக்கி இரத்தை உறுஞ்சி வாழும் ஒட்டுண்ணி ரகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் தான்.

மனித இனம் நாள் தோறும் பட்டடினியிலும், நோயிலும், அடிப்படை வசதி இன்றியும், இயற்கை சார்ந்த சூழலை இழந்தும், குடிக்க நல்ல நீர் இன்றியும் கொல்லப்படுகின்றனர். இப்படி வருடம் சில பத்து கோடி மக்களை வருடாவருடம் இந்த மூலதனம் ஜனநாயகத்தின் பெயரில் படுகொலை செய்கின்றது. இது இந்த அமைப்பில் அங்கிகாரிக்கப்பட்ட ஜனநாயகமாக, சட்டத்துக்கு உட்பட்ட கொலையாக தொடருகின்றது. சமுகத்துக்கு எதிரான தனிமனித ஜனநாயகம் உருவாக்கிய மூலதனத்தின் செழிப்பினால், இந்த மனித விரோத கொடூரங்கள் நடக்கின்றது. ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் படுகொலை செய்யும் இன்றயை சமூக நீதி சார்ந்த ஜனநாயக போதனைகளை, நாம் ஒரு நாளும் மண்டியிட்டு தலைவணங்கப் போவதில்லை. இந்த கபடம் நிறைந்த ஒநாய்களை ஒழித்துக் கட்ட, நாம் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தின் துணையுடன் உலகத்தையே மாற்றியமைப்போம். இங்கு ஊளையிடும் நாய்களாக வேடம் போடும் எவரையும் அனுமதிக்க போவதில்லை. சர்வதேச மூலதனமும், தனிச் சொத்துரிமையையும் நீடிக்கும் வரை, அவர்களின் தயவில் தூற்றுவது ஒரு பிழைப்புவாதத்தின் ஊற்று மூலமாக இருக்கும்;. இது சமூகத்தின் இரத்தத்தை ஊறுஞ்சும் அட்டையாக, தனிமனித உரிமையாக நீடிப்பதே இன்றைய அவதூறுகளின் மூலமாக உள்ளது. 

தொடரும்

முதற்பதிவு: செங்கொடி

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 19

20. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 20

21. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 21

22. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 22

23. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 23

24. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 24

25. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 25