Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதத்திற்கு எதிராக தென்னிலங்கை பல் கலைக்கழக மாணவர் சிலரின் சுயாதீன முன்னெடுப்பு

இன்று இனவாத்தினை மறுத்து நிற்கின்றார்கள் தென்னிலங்கை பல் கலைக்கழக மாணவர். தம்மோடு சக தமிழ், முஸ்லீம் மாணவர்களை இணைத்து சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள இனவாதத்தினை எதிர்த்து நிற்கிறார்கள். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் இனவாத உணர்வினை விதைத்து பிழைப்பு அரசியல் நடாத்தும் நிலையில் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தும் இந்த மாணவ சமூகத்தினை மனம் திறந்து வரவேற்போம்..!

இந்த மாணவர்கள் தம்மை ஒரு மக்கள் நலன் சார்ந்த அரசியல் அமைப்புடன் இணைத்துக் கொள்வதன் மூலமே இலங்கையில் வேறூன்றியுள்ள இனவாத்திற்கு எதிரான வெற்றியினை கண்டடைய முடியும். அதுவல்லாது சுயாதீனமாக செய்ற்படுவது என்பது இந்த மாணவர்களின் நல்ல நோக்கினை, அரசிற்கு எதிரான ஏனைய இனவாத கட்சிகள் தமது சொந்த அரசியல் லாபத்திற்கு இரையாக்கி விடக்கூடிய அபாயமே மேன்மையாக உள்ளது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.