Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கொரோனா வைரஸ்சும் - சமூக விரோதக் கொரோனாக்களும்

கொரோனா (கோவிட்19) வைரஸ் ஏற்படுத்தும் மரணங்கள், மனிதகுலத்தை பீதியடைய வைத்திருக்கின்றது. கொரோனா (கோவிட்19) வைரஸ் தொற்றைக் குணப்படுத்த மருந்து இல்லை என்பது, மனிதனின் பொது அச்சத்துக்கான அடிப்படையாக இருக்கின்றது. அறிவியல் பூர்வமாக அணுகினால், அச்சப்படக் கூடியளவிற்கு வீரியம் மிக்கதல்ல. அறிவியல் பூர்வமானதும்; - சமூகக் கண்ணோட்டமற்றதுமான அணுகுமுறையின் பொதுத்தன்மையே, வைரஸ்சை எதிர்கொள்வதற்கு தடையாக இருக்கின்றது.

இந்தப் பின்னணியில்

1.வதந்திகளே கொரோனோ வைரஸ்சை விட ஆபத்தான நோயாகி, கொரோனாவை எதிர் கொள்ளும் மனிதப் பகுத்தறிவின் ஆற்றலை அரித்து வருகின்றது.

2.கொரோனா வைரஸ் குறித்த பயத்தை உருவாக்கி பொருளை வியாபாரமாக்கும் சுயநலவாதிகளும் - நோயை எதிர்கொள்ளத் தேவையான அடிப்படை பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்கும் சமூக விரோதிகளுமே - கொரோனாவை விட அதிக அபாயமானவர்கள்.

3.பரபரப்பு செய்திகளைப் பரப்பி பணம் சம்பாதிக்கும் விபச்சார ஊடகங்களே, கொரோனாவை பற்றிய அறிவியலற்ற வதந்திகளையும் - பொய்களையும் பரப்பி, மக்களை கொரோனா தொற்றுக்குள்ளாக்குகின்ற வைரஸ்சாக இருக்கின்றனர்.

கொரோனா (கோவிட்19) வைரஸ் குறித்து தெரிந்து கொள்வேண்டியது


1. கொரோனா (கோவிட்19) வைரஸ் காற்று மூலமோ, நீர் மூலமோ பரவுவதில்லை. மாறாக வைரஸ் உள்ள ஓருவரைத் தொடுவதன் மூலம், பரவக் கூடியது. அதனாலேயே கையைக் கழுவக் கோருகின்றனர். அதேநேரம் நோய் உள்ளவரின் சளி, தும்மல், இருமல், உமிழ்நீரை தொடுவது – படுவது மூலம், வைரஸ் பரவக் கூடியது. அதனால் தான் நோயாளிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களை சுவாசத் தொற்று பாதுகாப்பு உறை (மாஸ்க்;) அணியக் கோருகின்றனர்.

2. மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கொரோனா (கோவிட்19) கட்டுப்படக் கூடியது. அதாவது உடல் ஆரோக்கியமான மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி, வைரைஸ்சை எதிர்த்து அழித்து விடப் போதுமானது. அதேநேரம் உடல் ஆரோக்கியமற்ற மனிதர்களுக்கே, வேறு சுவாசப்பை, இருதய, நீரிழிவு புற்றுநோய் போன்றவற்றால் நோயெதிர்ப்புத்தன்மையில் பலவீனம் கொண்டவர்களுக்கே கொரோனா (கோவிட்19) உயிர்க்கொல்லி நோயாக இருக்கின்றது. அவர்களையே இந்த நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பது அவசியமானதாக இருக்கின்றது.

கொரோனா (கோவிட்19) வைரஸ் குறித்து பொது அறிவும், சமூகப் பார்வையும் இருந்தால், இதை எதிர்த்துப் போராடப் போதுமானது. இதையே நாம் முன்வைத்து அறிவூட்ட வேண்டி இருக்கின்றது.

இதனால் பிறரை தொடுகின்ற போது கையைக் கழுவுவது அல்லது வைரஸ் அழிப்பு திரவத்தைக் கொண்டு கையை சுத்தப்படுத்துவதை மருத்துவ அறிவு கோருகின்றது. கையை சுத்தப்படுத்தாத சூழலில், கையை மூக்கு (விரலை மூக்குள் விட்டு தோண்டுவது), வாய் போன்ற இடங்களில் தொடுவதை தவிர்த்துக் கொள்வதன் மூலம், இந்த நோய்க்குரிய வைரஸ்சை அழித்து பரவலைத் தடுத்துவிட முடியும்.

மறுபக்கத்தில் நேயாளியைத் தனிமைப்படுத்துவது, வாய் மூக்கை மறைக்கும் வண்ணம் சுவாசத் தொற்றுப் பாதுகாப்புறையை (மாஸ்க்) அணிவதன் மூலம் பிறருக்கு தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். அனைவரும் சுவாசத் தொற்றுப் பாதுகாப்புறையை (மாஸ்க்) அணிய வேண்டியதில்லை, பிறருடன் தொடர்பு இன்றி இருக்கும் போது - சும்மா கையை கழுவ வேண்டியதில்லை. அறிவியல்ரீதியாக இதைத் தான் - மருத்துவம் கூறுகின்றது.

இப்படி உண்மைகள் இருக்கின்றது. அறிவியல்பூர்வமாக விளங்கிக் கொள்ளாத போது, அறியாமையும் - கற்பனைகளையும் கொண்ட போலித் தீர்வுகளை நாட வைக்கின்றது.

இது போலியான மருந்துகளையும், ஆலோசனைகளையும் - எண்ணற்ற வகையில் பரப்புகின்ற அறியாமையாகவும் மாறுகின்றது. மறுபக்கத்தில் இவை வியாபாரமாகி - மனித விரோதத்துக்கு வித்திடுகின்றது.

தொற்றுநீக்கிகளையும், சுவாசத் தொற்றுப் பாதுகாப்புறைகளையும் (மாஸ்க்); பதுக்கி, பல பத்து மடங்கு விலைக்கு விற்கின்ற அளவுக்கு நோய் காவிகளாக மாறியுள்ளதுடன், இந்த சமூக விரோதிகள் இந்த நோயின் பின்னணியில் இயங்குகின்றனர். மருத்துவமனைகளில் அடிப்படை அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு - சமூகத் தன்மையற்ற சுயநலம் இதன் பின்னணியில் தலை விரித்தாடுகின்றது.

வீரியமிக்க வைரஸ்சுகளை மனிதகுலத்துக்கு எதிராக உருவாக்கி வைத்திருக்கும் ஏகாதிபத்தியம்

வைரஸ்சுகளினதும் - பக்றீரியாக்களினதும் எண்ணிக்கை எண்ணற்றவை. மனித உடலில் உயிர்வாழும் - கண்ணுக்கு தெரியாத இந்த நுண்கல உயிரினங்கள் போலியான மனித அறிவைக் கடந்து மிகப் பிரமாண்டமான எண்ணிக்கை கொண்ட நுண்கல உயிரியல் தொகுதியாகும். இங்கு நன்மை – தீமை செய்யும் நேர்மறையான உயிரியல் நுண்கல உயிரினங்கள், மனித உடலில் அத்தியாவசியமான கூறாகவும் தீங்கான கூறாகவும் இருக்கின்றது. இது போல், மனிதன் அல்லாத பல்லின உயிரினங்களிலும் - எண்ணற்ற நுண்கல உயிரினங்கள் இயங்குகின்றது.

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்சுகளுக்கும் - பக்றீpரியாக்களுக்கும் எதிரான போராட்டமும், உயிர் அழிப்பும் இடைவிடாது உடலில் நடக்கின்றது. தீங்கான வைரஸ்சுகளையும் - பக்றீரியாக்களையும் அழித்தல் (கொல்லுதல்) மூலமே - மனித உடல் நோயற்ற தன்மையைப் பெறுகின்றது. உயிர் கொல்லாமை குறித்த போலியான மத நம்பிக்கைகளுக்;கு முரணாக உண்மை.

கொரோனா (கோவிட்19) வைரஸ் சீனாவுக்குரிய, அந்த மக்களின் உணவு பழக்கத்துக்குரியது என்ற போலி அறிவியல், பகுத்தறிவுக்கு முரணானது. இயற்கையில் வைரஸ்சுகள் ஏற்கனவே இருப்பதுடன், வைரஸ்சுகள் வீரியம் பெறுவதும், புதிதாக தன்னை மாற்றி தகவமைத்துக் கொண்டு உயிர் வாழ முனைவதும் என்பது இயற்கை. இதைக் கடந்து கொரோனா (கோவிட்19) வைரஸ் புதிதாக உருவாகவில்லை.

இதை மறுத்து அணுகுவது அறிவியலற்ற பார்வையாகும். அதேநேரம் அரசியல்ரீதியாக, வலதுசாரியப் பார்வை. அது இனவாதமாக, நிறவாதமாக, மதவாதமாக அணுகுகின்ற தூய்மைவாத கண்ணோட்டம் கொண்ட வரட்டுப் பார்வை. மனிதவிரோதத் தன்மை கொண்ட, சமூக விரோதக் கண்ணோட்டமும் சிந்தனைமுறையுமாகும்.

கொரோனா (கோவிட்19) வைரஸ் தொற்று, மனிதன் சமூகத்தன்மை கொண்டவனாக - ஒருவருடன் ஒருவர் இடைவிடாத தொடர்பு கொண்டவனாக இருப்பதை அறிவியல்பூர்வமாக நிறுவி இருக்கின்றது. இனம், மதம், சாதி, நிறம்,.. என்று எல்லாக் குறுகிய மனித எல்லைகளையும் கடந்து - மனிதன் என்ற பொது உயிரியல் அடையாளத்தையே தாக்குகின்றது. அதேநேரம் மனித உயிரியலில் இயங்கும் பிற உயிரினங்கள் - தனித்தன்மையற்ற பொதுப் பரம்பல் விதிக்குள் இயங்கிக் கொண்டு - மாறிக் கொண்டு இருப்பதை, இந்த நோயின் பரவல் உறுதி செய்கின்றது. ஆகவே இனம், மதம், சாதி, நிறம், .. போன்ற பிரிவினைவாதங்கள், பிளவுவாதங்கள் போலியானவை – புரடடுத்தனமானவை.

கடவுள் தான் எல்லாவற்றையும் படைக்கின்றார், மனிதனை பாதுகாக்கின்றார் என்று மதவாதிகளின் போலி மதப் பிரச்சாரங்களை, கொரோனா (கோவிட்19) வைரஸ் அம்பலமாக்கி இருக்கின்றது. தென்கொரிய, பிரான்ஸ் கொரோனா (கோவிட்19) வைரஸ் தீவிர மதவெறி கொண்ட கூட்டத்தில் இருந்து தான், பரவத் தொடங்கியது. கடவுள் வழிபாடுகளைக் கூட ரத்து செய்யுமளவுக்கு, கொரோனா (கோவிட்19) வைரஸ் "கடவுளுக்கு" வெளியில் சுதந்திரமாக இருக்கின்றது. அதேநேரம் தீவிர மதவெறி கூட்டத்தை, அவர்கள் நம்பும் 'கடவுள்' கூட வைரஸ்சில் இருந்து காப்பாற்றவில்லை.

மிக ஆபத்தான வைரஸ் ஏகாதிபத்தியங்கள் வைத்திருக்கும் உயிரியல் ஆயுதங்களே. மனித குலத்தை அழிக்க, வீரியமிக்க வைரஸ்சுகளையும் - பக்றீரியாக்களையும் ஏகாபத்தியங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. அது காற்று, நீர்.. முதற்கொண்டு எல்லா வகையிலும், கொரோனா (கோவிட்19) வைரஸ்சை விட, பலமடங்கு வேகத்தில் பரவக் கூடியது.

இன்றைய மனித அச்சத்தை விட, பல நூறு மடங்கு வேகத்தில் மனிதனை அழித்துவிடக் கூடிய ஆயுதங்கள் அவை. இதை நாம் எதிர்த்துப் போராட வேண்டியதையே, கொரோனா (கோவிட்19) எமக்கு இயற்கையாக உணர்த்தி நிற்கின்றது. ஏகாதிபத்;தியங்கள் பன்நாட்டு மூலதனத்தை கொள்ளையிடவும் - பாதுகாக்கவும், மனிதகுலத்துக்கு எதிராக தயாரித்து வைத்துள்ள உயிரியல் ஆயுதங்களை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை கொரோனா (கோவிட்19) வைரஸ் உணர்த்தவில்லையென்றால் – சுயநலத்துடன் கூடிய போலியான அறிவியலில் புளுக்கின்றோம் என்பது தான் பொருள்.